Tuesday, 29 July 2014

பெண்களை உங்க பின்னாடி சுத்த வைக்கனுமா.?? இதோ 10 வழிகள்.!!!







பெண்களை பூவோடு ஒப்பிட்டு கூறுவார்கள். ஏனெனில், அவர்கள் மலர் போன்ற மனதை உடையவர்கள். ஒரு பெண் தன்னை உண்மையாக விரும்பும் ஒரு மனிதரிடம் தன்னைப் பற்றி வெளிப்படுத்த தயங்கமாட்டாள்.

மேலும், அது பொய் எனத் தெரிந்தால். அதனை தாங்கவும் மாட்டாள். இன்றைய பெண்கள் நாகரீக வாழ்வு வாழ்ந்து வந்தாலும். ஒவ்வொரு பெண்ணும் பெண்ணிற்கே உரிய பண்புகளுடன் தான் காணப்படுகின்றாள்.

பெண்களை புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமான காரியங்களில் ஒன்றாகும். நீங்கள் எவ்வளவு காலம் தான் அவர்களோடு சேர்ந்து வாழ்ந்து வந்தாலும்.பெண்களை முழுவதுமாக புரிந்து கொள்வது என்பது கடினமான ஒன்றாகும். நீங்கள் விரும்பும் பெண்ணை மதிப்பிடுவதற்கு உங்கள் வாழ்நாள் முழுவதும் தேவைப்படலாம். பெண்களை முழுவதும் புரிந்து கொண்டு. நமது உறவை வலுப்படுத்த பல வழிகள் உள்ளன. நீங்கள் விரும்பும் பெண்ணை புரிந்து கொள்ள அவரோடு அதிகமாக பேச வேண்டும். இது ஒரு விட்டுகொடுத்தல் முறையாகும். அதனால் நீங்கள் அந்த பெண்ணிடம் உண்மையாகவும். வெளிப்படையாகவும் இருந்தால். அவர்கள் உங்களை முழுமையாக நம்புவார்கள்.

உங்கள் அன்பையும் உறுதியையும் அவர்களுக்கு அளித்தால் உங்களிடம் நம்பிக்கை ஏற்பட்டு தன்னை பற்றி சொல்ல முன் வருவார்கள். நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் அல்லது எவ்வளவு நன்றாக முயற்சி செய்திருந்தாலும், அவர்களிடம் பொறுமையை கடைப்பிடிப்பது தான் மிகவும் முக்கியமானதாகும். ஒரே இரவிலோ அல்லது ஒரே வருடத்திலோ நடக்கக்கூடியது அல்ல. பத்தாண்டுகள் பிறகு அவர்களிடம் ஏதேனும் புதிதாக கண்டறிந்தால், அதற்காக ஆச்சரியப்பட வேண்டாம். 

அவர்களிடம் கனிவாகவும், அன்புடனும் புரிதலுடனும் இருப்பது தான் முக்கியமாகும். ஒரு பெண்ணிடம் வெளிப்படையாக அணுகுவதே நல்லது. இதனால், அவர்களிடம் சிறு காரியங்களுக்கு ரியாக்ட் செய்து அவர்களை வருத்தப்படச் செய்யாதீர்கள்.

பொறுமை ஒரு பெண்ணை புரிந்துகொள்ள சில காலம் தேவைப்படும். ஒரு பெண்ணை நன்றாக புரிந்துகொள்ள தேவைப்படுவது பொறுமைதான். சில நாட்களிலேயே அல்லது மாதங்களிலேயே புரிந்துகொள்ள எதிர்பார்க்கக்கூடாது. விதையை விதைத்து பூவிற்காக காத்திருங்கள்.
அன்பு ஒரு பெண்ணை நன்றாக புரிந்துகொள்ள அன்புடன் அவரை எதிர்கொள்ளவேண்டும். 

தன்னை மிகவும் விரும்பும் ஒருவரிடம் எந்த ஒரு பெண்ணும் தன் எண்ணங்களை முழுவதுமாக வெளிப்படுத்துவாள். நீங்கள் அன்புடன் எதிர்கொண்டால் தன்னை புரிந்துகொள்ள அனுமதி அளிப்பாள்.
அன்பும் அக்கறையும் நீங்கள் அன்புடன் அவர்களை எதிர்கொண்டாலும் உடனே தன்னை வெளிப்படுத்த தயங்குவார்கள். தன்னை அன்புடனும் அக்கறையுடனும் கையாளும் ஒருவரிடம் மெல்ல அவர்களின் எண்ணத்தையும் உணர்ச்சியையும் வெளிப்படுத்துவார்கள்.

பேசுதல் பெண்கள் அதிகம் பேச விரும்புவார்கள். ஒரு பெண்ணை புரிந்து கொள்வதற்கு அவருடன் நன்கு பேசத் தொடங்க வேண்டும். இது ஒரு பெண்ணை புரிந்து கொள்வதற்கான முதல் படியாகும். நீங்கள் அவர்களிடம் வெளிப்படையாக பேசுவதால் அவர்களை சரியாக மதிப்பிட முடியும்.

முதல் படி ஒரு பெண்ணை புரிந்துகொள்ள இந்த முதல் படியை தொடங்கவேண்டும். அவர்களை வெளிப்படையுடனும் நேர்மையுடனும் அணுக வேண்டும். இந்த முதல் படியான பகிர்தல் மூலம் அவர்கள் தன்னை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள அனுமதி அளித்து உங்களைப் பற்றி அவர்கள் புரிந்து கொள்ள விரும்புவார்கள்.

வேறுபாடு ஒவ்வொரு பெண்ணும் அவர்களது வழியில் வேறுப்பட்டே இருப்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளவேண்டும். ஒரு சிலர் வெளிப்படையாகவும் ஒரு சிலர் நாணத்துடனும் இருப்பார்கள். அவர்களை ஒப்பிட்டு பார்க்காமல் எளிதாக அவர்களை புரிந்துகொள்ள முற்படுங்கள் கேள்வி எழுப்புங்கள் பெண்கள் அதிகம் பேச ஆசைப்படுவார்கள். ஏதாவது கேள்வி கேட்டு அவர்களை பேச அனுமதி அளியுங்கள். இவ்வாறு அவர்களை பேச விட்டு உங்களின் சரியான கேள்விகள் மூலம் அவர்களை புரிந்துகொள்ளுங்கள்.

அவர்களது கடந்த காலம் ஏன் சில பெண்கள் ஒரு சில நேரம் சரியாக பழகாமல் போவதற்கும் வெளிப்படையாக பகிராமல் இருப்பதற்கும் காரணம் இருக்கக்கூடும். அதனால், அவர்களை புரிந்துகொள்ள அவர்களின் கடந்தகாலத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அந்த கடந்தகால நிகழ்வுகளால் தான் அவள் இப்படி இருக்கிறாள் என்பது தெரியவரும்.

ஒன்றாக சேர்ந்து நேரத்தை செலவழிப்பது வழக்கமாக அவர்களை சந்திப்பது மற்றும் அவர்களுடன் சேர்ந்து சேர்ந்தே இருப்பது போன்றவற்றை ஏற்பாடு செய்யவேண்டும். அவர்களோடு நீண்ட நேரம் செலவிடுவதால் அவர்களை பற்றி புரிந்துகொள்ள முடியும்

முத்தங்களின் அர்த்தங்கள் உங்களுக்கு தெரியுமா?


காதலை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான ஒரு வழி தான் முத்தம். இத்தகையமுத்தமானது நம் அன்பிற்குரியவர் நம்மீது கோபத்துடன் இருந்தால் கூடஅப்போது ஒரு முத்தத்தின் மூலம் கோபத்தைத் தணிக்கலாம். மேலும் காதலர்கள்முத்தம் கொடுப்பதில் பல வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொருஅர்த்தத்தை வெளிப்படுத்தும். காதலின் முதல் மொழி முத்தம் என்று சொல்லலாம். ஏனெனில் இது எண்ணத்தைவெளிப்படுத்தும் சங்கேத பாஷையாக உள்ளது. இங்கு எந்த இடத்தில் முத்தம்கொடுத்தால் என்ன அர்த்தம் என்பதைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்துபாருங்களேன்.
உதட்டில் முத்தம்
காதலர்கள் அதிகம் உதட்டில் தான் முத்தம் கொடுப்பார்கள். இப்படி உதட்டில்முத்தம் கொடுத்தால் அது நான் உன்னை உயிரை விட மேலாக நேசிக்கிறேன் என்றுஅர்த்தமாம்.
கண்களை திறந்து முத்தம்
முத்தத்தை கொடுக்கும் போது உங்கள் துணை கண்களை திறந்து கொண்டு கொடுப்பதுபோல் உணர்ந்தால் அவர் உங்களை இன்னும் சந்தோஷப்பட வைப்பதுடன் உங்களைஉணர்ச்சியை ரசிக்கிறார் என்று அர்த்தம். இதை பெரும்பாலும் புதியதம்பதியர்கள் தான் கொடுப்பார்கள்.
கண்களை மூடி கொடுப்பது:
காதலர்கள் இருவரும் கண்களை மூடிக் கொண்டே உதட்டோடு உதடு முத்தம்கொடுத்தால் இருவரும் அந்த தருணத்தை ரசித்து கொடுக்கிறீர்கள் என்றுஅர்த்தமாம்.
கைகளில் முத்தம்:
கைகளில் முத்தம் கொடுத்தால் அவர் உங்களை மிகவும் மதிக்கிறார் என்று அர்த்தமாம்.
கன்னத்தில் முத்தம்
கன்னத்தில் முத்தம் கொடுத்தால் உங்களுடன் நட்பாக இருக்க விரும்புகிறேன்என்று அர்த்தமாம்.
கழுத்தில் முத்தம்
அருகில் வந்து கட்டிப்பிடித்து கழுத்ததில் முத்தம் கொடுத்தால் அதற்கு நீ எனக்கு வேண்டும் என்று அர்த்தமாம்.
கண்களில் முத்தம்
கண்களின் மேல் முத்தம் கொடுத்தால் அதற்கு நான் எப்போதும் உன்னுடன் இருக்க விரும்புகிறேன் என்று அர்த்தமாம்.
நெற்றியில் முத்தம்
நெற்றியில் முத்தம் கொடுத்தால் அதற்கு வாழ்நாள் முழுவதும் உன் அன்பு எனக்கு வேண்டும் என்று அர்த்தமாம்.
மூக்கில் முத்தம்
மூக்கின் மேலே முத்தம் கொடுத்தால் நீ மிகவும் அழகாக இருக்கிறாய் உன்னை விட அழகு வேறு யாரும் இல்லை என்று அர்த்தமாம்.

குழந்தையை இப்படி வளர்க்கணும்:

ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பா படிக்க வேண்டிய பயனுள்ள விடயங்கள்! ! ! !

1. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!
2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.
3. ஒருபோதும் “ச்சீ வாயை மூடு” “தொணதொண என்று கேள்வி கேட்காதே” என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!
4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.
5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!
6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.
7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்
8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.
9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!
10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.
11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!
12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ,அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.
13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.
14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!
15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.
16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!
17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.
18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!
19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.
20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். “All work and no play makes Jack a dull boy”
21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள். சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.
22. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ,பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.
23. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், “Good touch”, “bad touch” எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.
24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!
25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல!
பெற்றோர்களுக்காக சில துளிகள்:-
1. அம்மா என்றால் சமையல் செய்பவள், அப்பா என்றால் சம்பாதிப்பவர் என்ற கருத்துக்களை குழந்தைகளின் மனதில் விதைக்காதீர்கள். யார் வேண்டுமானாலும் எந்த வேலையையும் செய்யலாம், உயர்ந்தது, தாழ்ந்தது ஏதுமில்லை என்ற எண்ணங்களை விதையுங்கள்!
2.. எதுவாய் இருந்தாலும் அம்மா மட்டுமே அல்லது அப்பா மட்டுமே, அல்லது வீட்டில் உள்ள பெரியவர் மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்று இப்போதே கருத்து சுதந்திரத்தை மறுக்காதீர்கள்!
3. குழந்தைகள் பற்றிய முடிவுகளை, அவர்களிடம் கருத்துக் கேட்டு, அவர்களின் உணர்வுக்கும் மதிப்பு கொடுத்து முடிவு செய்யுங்கள். அவர்கள் சொல்லும் கருத்து அல்லது விருப்பம் உங்களுக்கு ஏற்புடையது அல்ல என்றால், அதை ஒரு தோழமையுடன் எடுத்துச் சொல்லுங்கள்! ஒருபோதும் உங்கள் அதிகாரத்தை பிரயோகிக்காதீர்கள்!
4. பகிர்ந்து உண்ணுதல், விலங்குகளிடம் அன்பு செலுத்துதல் போன்ற பழக்கங்களை விதையுங்கள். குழந்தையுடன் செல்கையில் நீங்களே ஒரு நாயையோ, பூனையையோ கல்லெடுத்து விரட்டி, வன்முறையை விதைக்காதீர்கள்! பெரும்பாலும் வீட்டு விலங்குகளுடன் பழகும் குழந்தைகளிடம் அன்பு நிறைந்திருக்கும், வன்முறை குறைந்திருக்கும். (அன்பு நிறைந்திருக்க நீங்கள் இங்கு கூறிய எல்லாவற்றையும் செயல்படுத்த வேண்டும்)
5. அந்த மாமா வந்தால், அப்பா வீட்டில் இல்லை என்று சொல்லு என்றோ, அந்த கடன்காரன் பேசுறானா போனில், நான் வீட்டில் இல்லை என்று சொல்லு என்றோ இப்போதே பொய் கூற பழக்காதீர்கள்.
6. “நம்ம சாதிக்காரங்க இவங்க”,” நம்ம மதத்தை சேர்ந்தவங்க இவங்க” என்ற அறிமுகத்தை விட்டுவிட்டு, உறவுமுறை கொண்டோ, நட்பின் பின்புலம் கொண்டோ அறிமுகம் செய்யுங்கள்.
7.. உங்கள் குழந்தையை, உங்கள் மற்றொரு குழந்தையோ அல்லது வேறு ஒருவரின் குழந்தையோ, அடித்தாலோ, திட்டினாலோ, “திருப்பி திட்டு”, “திருப்பி அடி” என்று வன்மம் வளர்க்காதீர்கள்! நாளை இவர்கள்தான் ஆயுதம் எடுப்பார்கள்.
8.. ஏன் அந்த தவறு நடந்தது? இனி இப்படி நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று சம்பந்தப்பட்ட குழந்தைகளிடமே தீர்வு கேளுங்கள்! மெதுவாய் இணக்கமான சூழ்நிலை உருவாகும். நாளை நல்ல சட்ட வல்லுனர்கள் உருவாகலாம்!
9.”கத்தாதே சனியனே” என்று நீங்கள் கத்தி கொண்டு இருக்காதீர்கள். மலர்களை கொடிய வார்த்தைகளில் அர்ச்சிக்காதீர்கள்.
10.. பலபேர் முன்னிலையில் ஒருபோதும் உங்கள் குழந்தையை திட்டி, குறை சொல்லி வேதனை படுத்தாதீர்கள். குழந்தைகளுக்கும் சுயகௌரவம் உண்டு, எந்த வயதானாலும்.
11. “அண்ணன் சொல்வது போல நட”, “அக்கா சொல்வது போல நட” என்று சொல்லாமல்,” நீங்கள் இருவரும் பேசி முடிவு செய்யுங்கள்” என்று சமத்துவம் உருவாக்குங்கள். பெரியவர் முதுகில் சுமையையும், சிறியவர் மனதில் தாழ்வுணர்ச்சியையும் ஏற்படுத்தாதீர்கள்!
12. கூட்ட நெரிசல் மிக்க இடங்களில் குழந்தைகளை அழைத்துச் செல்வதை தவிர்த்து விடுங்கள்! அழைத்து செல்ல நேர்கையில், பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்!
13. ஒருபோதும் குழந்தையின் முன்னிலையில் புகைப்பிடிப்பது, மது அருந்துவது, அல்லது அதை வாங்கி வர பணிப்பது போன்ற அடாத செயல்களை செய்யாதீர்கள்!
14. குழந்தையின் சில சிறு வயது குறும்புகள், விலங்குகளையோ, பெரியவர்களையோ, சக குழந்தையையோ துன்புறுத்துவதாக அமைந்தால், குழந்தையின் எதிரே அந்த குறும்பை கண்டு சிரித்து, ரசிக்காதீர்கள். உங்கள் சிறு குழந்தை, குறும்பாய் வீட்டில் பாட்டியின் பல்லை உடைத்தாலோ, பூனையின் வாலைத் பிடித்து தூக்கி எறிந்தாலோ, குழந்தைக்கு எவ்வளவு வலிமை, பயமேயில்லை என் குழந்தைக்கு என்று குழந்தையின் எதிரே ரசித்தீர்கள் என்றால், பின்னாளில் வளரும் வன்முறையில் நீங்கள் ரசிப்பதற்கு ஏதும் இருக்காது!
15. உங்களால் செய்யக் கூடிய செயல்களை, தரக் கூடிய பொருள்களை, குழந்தையை அழ வைக்காமல் செய்து விடுங்கள், கொடுத்து விடுங்கள். அடம் பிடிக்க வைத்து, அழ வைத்தபிறகு செய்தால், குழந்தைக்கு அழுவதும், அடம் பிடிப்பதும் மட்டுமே இயல்பாகும்.
16. காய்ச்சல் என்பது ஒரு நோயின் அறிகுறியே தவிர, அதுவே நோய் அல்ல. உடலில் உள்ள கிருமிகளை அழிக்கும் பொருட்டு இயற்கையாய் உடலில் ஏற்படும் வெப்பம் அது. குழந்தைகளுக்கு காய்ச்சல் கண்டால், சிறந்த குழந்தை நல மருத்துவரை கண்டு, எதற்கான காய்ச்சல் என்று கண்டறிந்து பரிந்துரைக்கப்படும் மருந்துகளை குறித்த வேளையில், குறித்த இடைவெளியில் மட்டுமே தருக. நாமே மருத்துவர் ஆவதை தவிர்த்தல் நலம்!
17. பலபேர் முன்னிலையில் எப்போதும் குழந்தைகளை குறை கூறுவதோ, அடிப்பதோ, திட்டுவதோ…இது போன்ற எந்த செயல்களையும் செய்யாதீர்கள். உங்களை இதுபோல் பிறர் செய்தால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?
18. குழந்தைகள் சின்னஞ்சிறு பெரிய மனிதர்கள், இன்று நீங்கள் விதைப்பதை நாளை நீங்கள்தான் அறுவடை செய்ய வேண்டும். நல்லன விதைத்தால் நாளை நல்ல சமுதாயம் மலரும்!
19. நல்ல கல்வி, சுய சிந்தனை, கைத்தொழில், சத்துள்ள உணவு, மரியாதை, ஆரோக்கியம் மற்றும் உள்ளார்ந்த அன்பு இவையே எல்லா குழந்தைகளுக்குமான அடிப்படை தேவைகள்!

Monday, 7 July 2014

கடைசி தலைமுறை

 
 
 1.செல்போன்ல பட்டன பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.


 2 .மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமாதான்...!

3.கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

4.மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

5.வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

6.தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

7.கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

8.காதல்கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி ,பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப்பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

9. நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

10. மாமா பொண்ணு ,அத்தை பொண்ணு என ஏகப்பட்ட முறைப்பொண்ணுங்க  சூழ வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

Sunday, 6 July 2014

குழந்தை வரம் கொடுக்கும் இயற்கை மூலிகைகள்!
இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித்திரிந்தவர்கள் திருமணத்திற்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்கடத்திற்கு உள்ளாவார்கள். என்ன செய்வது? எதை சாப்பிட்டால் இந்த குறை தீரும் என்று குழம்பி கண்ட கண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடலையும் மனதையும் நோய்க்கு ஆளாக்கிவிடுவார்கள்.
ஆண்மை குறைபாடோ, மலட்டுத்தன்மையோ இந்த குறைபாடுகளை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம் இருக்கிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் எளி...தில் நிவாரணம் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். குறையிருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்களேன்.
ஆண்மைக்கு ரோஜா குல்கந்து

                  காதலின் சின்னம் ரோஜா மலர். இதிலிருந்து தயாரிக்கப்படும் "குல்கந்து" இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுவதாக ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குல்கந்து உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண்ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது.
தாது விருத்தி தரும் பூசணிக்காய்

            பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த லேகியத்தை தினசரி சாப்பிட்டு வர உடல் வலிமை பெறுவதோடு பொலிவடையும் அதோடு தாது விருத்தி ஏற்படும். பூசணிக்காயின் விதைகள் ஆண்மை குறைபாட்டினை நீக்கும். இந்த விதைகளை சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியடையும்.
இனிமையான உறவுக்கு இலுப்பை பூ

             இலுப்பை மரத்திலிருந்து கிடைக்கும் பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.மெலிந்த உடலுள்ளவர்கள் இலுப்பை பூக்களை பசும்பால் விட்டு அரைத்து காய்ச்சிய பாலுடன் சிறிது சர்க்கரை சேர்ந்து பருகி வந்தால் நாற்பத்தெட்டு நாட்களுள் உடம்பு தேறும். ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் பசும் பாலுடன் இலுப்பைப் பூ கஷாயத்தைச் சேர்த்து பருகினால் ஆண்மைக் குறைபாடு குணம் அடையும்.
குழந்தை வரத்திற்கு ஆலம்பழம்

                சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின் மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும். மரத்தில் கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலரவைக்கவேண்டும். பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடி செய்து காற்றுப்புகாத பாத்திரத்தில் அந்த பொடியை போட்டுவைத்துக்கொள்ளவேண்டும். தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்கவேண்டும். 48 நாட்கள் இந்த பொடியை குடித்து வர மலடு நீங்கி குழந்தை பிறக்கும்.

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?



1. அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது.

2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வளம் வரும்போது.

3. பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் , படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது.

4. அழகை திமிராக காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது.

5.யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக் கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது.

6.அச்சப் பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க வேண்டிய இடங்களில் கம்பீரமாய் இருக்கும் போது.

7.காதில் இருக்கும் கம்மல் தன் பேச்சுக்கு தாளம் போடும் படி, தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது.

8.தம்பி தங்கைகளுக்கு இன்னொரு தாயாய் இருக்கும் போது.

9.தந்தையின் குடும்ப கஷ்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளும் போது.

10.ஆபாசமில்லாத உடையணிந்து அழகை எப்போதும் மறைத்தே வைத்திருக்கும் போது.

11.ஆண்கள் கூட்டத்தை கடக்கும் போது,நம்மை ஏதேனும் சொல்லி கிண்டலடித்து விடுவார்களோ என்று மனதில் ஆயிரம் கேள்விகளை சுமந்த படியே செல்லும் போது.

12.சமைக்கத் தெரியாது என்பதை பெருமையாக சொல்லாமல், அன்னமிடுவதில் அன்னையாய் இருக்கும் போது.
 
13.தரைக் கூட்ட இருக்கும்
பாவாடையை தூக்கி பிடித்த படி பாத
கொலுசில் ஜதி பாடி நடந்து வரும் போது.

2.பேருந்தில்
தெரிந்தே இடிப்பவனுக்கு யாருக்குமே தெரியாமல்
தண்டனை தரும் போது.

3.நான் இப்படியெல்லாம் வளர்ந்தேன்
என்று பெருமை பேசாமல் உன்னை அழகாய்
வளர்த்திருக்கிறார்கள்
என்று அனைவரையும் சொல்ல வைக்கும்
போது.

4.பொன்னகையே இல்லாமல்
புன்னகையால்
மட்டுமே தன்னை அலங்காரம்
செய்து கொள்ளும் போது.

5.கோபத்தை உள்ளடக்காமல், பட பட வென
எண்ணையில் போட்ட கடுகாய்
பொறிந்துவிட்டு பின் தனியாய்
அமர்ந்து அழும் போது.

6.ஆண்களை அடக்காமல் தானும்
அடங்காமல் சமமாய்
நிற்பதே பெண்ணுரிமை என்பதை உணரும்
போது.

7.வாயாடி என யார் பட்டம் தந்தாலும் வாய்
பேசுவதை நிறுத்தாமல் தன்
இயல்பு நிலையிலேயே இருக்கும் போது.

8.அத்தி பூத்தாற் போல்
அவ்வப்போது தன்னை அறியாமலேயே வெ
போது.

9.தன்னை விட பெரிய
பாதுகாப்பு தனக்கு வேறு யாருமில்லை எ
போது.

10.இவ்வளவு தான் உன் சுதந்திரம்
என்பதை யாரும் சொல்வதற்கு முன்னரே,
தன் சுதந்திரத்தின்
எல்லையை தானே வகுத்துக் கொள்ளும்
போது.

11.புல்லில் தங்கிய பனித்துளி போல ஈரக்
கூந்தலின் நுனியில் இருந்து சொட்டும்
தண்ணீரை தட்டி விட்ட
படி கூந்தலை உலர்த்தும் போது.

12.தெரிந்த கேள்விக்கு தெரியாது என்றும்
பிடித்ததை பிடிக்காது என்றும் வா என்னும்
இடத்தில் போ என்றும் மாற்றி மாற்றி பதில்
சொல்லி ஆண்களை குழப்பும் போது.

13.தனக்காக கண்ணீர் சிந்தும் ஆண்
கிடைத்தால் அவனை எப்போதும்
அழவிடாமல் பார்த்துக் கொள்ளும் போது.
மனதால் வீரமாக , குணத்தால் அன்பாக ,
செயலால் நேர்மையாக இருக்கும்
எல்லா பெண்களுமே அழகு தான்.!!!!!!!!!!!!!!!!!!!


# தன்னலமில்லாத, செயற்கைத் தனமில்லாத எல்லா பெண்களுமே அழகு தான்.

ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாகிறான் ???

 
 
1.விடலைப் பருவத்தில் தினமும்
காலை எழுந்ததும்
தனக்கு மீசை அரும்பி விட்டதா என்று கண்ணாடியில்
பார்க்கும் போது.
2.இது வரை ஆண்கள்
பள்ளியிலேயே படித்துவிட்டு,
இருபாலர் படிக்கும்
கல்லூரியில் நுழைந்ததும்
அச்சத்தோடும் கூச்சத்தோடும்
பெண்களை ஓரக்கண்ணில்
பார்க்கும் போது.
3.பெண்கள் தன்னை பார்க்க
வேண்டும் என்பதற்காக
எதையும் செய்யாமல், தான்
தானாகவே இருக்கும் போது.
4.எவ்வளவு முரடனாக
இருந்தாலும் , தன் வீரத்தையும்
திமிரையும் ஓரங்கட்டிவிட்டு ,
பெண்ணிடம் பணிவாய் பேசும்
போது.
5. சொந்த உழைப்பில் கிடைத்த
தன் முதல் மாத
சம்பளத்தை கை நீட்டி வாங்கும்
போது.
6.காத்திருக்க
முடியாதென்றுச் சொன்ன
காதலியை தன்
குடுபத்திற்காக தியாகம்
செய்யும் போது.
7.தன் தங்கைக்கு தான்
இன்னொரு தந்தை என்பதை உணரும்
போது.
8.இரு சக்கர வண்டியை உர்ர்
உர்ர்ர்ர்ர்ர்ர் ர் என உறுமாமல்,
சிக்னலில்
வண்டியை நிறுத்தி விட்டு கண்ணாடியில்
தலை முடியை சரி செய்யும்
போது.
9.வேட்டியை மடித்துக் கட்டிக்
கொண்டே நடக்கும் போது.
10.அப்பாவிடம் அதிகம்
பேசாவிட்டாலும் கூட அவரின்
ஒவ்வொரு அசைவுகளையும்
தெரிந்து வைத்திருக்கும்
போது.

பொண்ணுகளை சமாதானம் பண்றது பெரிய கஷ்டம். சில முயற்சிகளும்...




முயற்சி No 1 :
"பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
 
ரியாக்சன் No 1 :
"பொக்கேவை தூக்கி வீசிட்டு,
முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க
"
முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச
கிபிட் வாங்கி கொண்டுபோய்
குடுக்குறது"
 
ரியாக்சன் No 2 : "நான் கேட்டேனா?
நீயா திருப்பி எடுத்துட்டு போறியா
இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?
 
முயற்சி No 3 : "லவ்வரோட
தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3 : "நீயாருடி எங்க
ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட
பேசிகுறேன்? எங்க பர்சனல உண்ட
எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"
 
முயற்சி No 4 : "உன் மேல
சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன்,
நம்புடி செல்லம்"
 
ரியாக்சன் No 4 :
"இது பதினேழாவது சத்தியம், உன்னைய
நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை,
தயவு செய்ஞ்சு போயிரு"
 
முயற்சி No 5: sentimentல பொங்குறது:
"செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்
பட்டா நான் யார்ட போய் சொல்லுவேன், என்
தங்கமல நீ, இதுதான் கடைசி,
மன்னிசுருடி புஜ்ஜி"
 
ரியாக்சன் No 5 : கொஞ்சம் சமாதானம்
ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உண்ட
பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல
ஒரு தடவை சொன்னா புரியாதா?,
சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"
 
முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம்
"தங்கம் நீ எண்ட பேசாட்டி நான்
செத்துருவேண்டி, ரெண்டு நாளா உண்ட
பேசாம பைத்தியம் பிடிச்ச
மாதிரி இருக்கு,
நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு
போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல
வந்துச்சு, கடைசியா உண்ட
பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி
செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
 
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன்
சொல்லுவாங்க, சிலர்
கோவமா சொல்லுவாங்க
"டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற?
நான் கோவ படாம உண்ட்ட வேற
யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன்
நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய
விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த
தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான்,
நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட
பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா?
என்னால தாங்கிக்க முடியலடா தங்கம்,
இப்டியெல்லாம் பேசாத,
சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்
."
முயற்சி No 7 : மேல சொன்ன எந்த
முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம்,
சூடு, சுரணை, எல்லாத்தையும்
விட்டுட்டு அவுங்க
காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற
வழியே இல்லை

ஒரு தாயின் அறிவுரை… திருமணமாகப் போகும் தன் மகனுக்கு:

   திருமணம் ஆவதற்கு முன்னால் உன்னிடம் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன். இது உனக்கு வியப்பாக இருக்கலாம். பெண்ணுக்குத்தானே இப்படிச் சொல்லுவார்கள் என்று நினைக்கிறாயா? இல்லை கண்ணா... நாங்கள் மனம் திறந்து சொல்வதைச் சொல்லி விடுகிறோம். காதில் போட்டு வைத்தால் சில விஷயங்கள் மனதிலும் இறங்கும். அதுவே தக்க சமயத்தில் உதவக்கூடும்!
பெஸ்ட் அம்மா...!
...
            இதுவரையில் பெண்ணென்று வீட்டில் உன் அம்மாவை மட்டுமே பார்த்திருக்கிறாய். அவள் சமைப்பதையும், வீட்டை வைத்துக் கொள்வதையும், பாடம் சொல்லித் தருவதையும் பாடுவதையும், கோலம் போடுவதையும், பண்டிகைகளை முழுமையாகக் கொண்டாடுவதையும் எதிலும் திறம்பட எடுக்கும் முடிவையும் பார்த்து என் அம்மாதான் பெஸ்ட் என்று எண்ணியதில் தப்பில்லை. உள்ளூர எனக்கு அது பெரிய கிரீடம்தான்!
               இனிமேல் அதையே மனதில் அசைபோடாதே! அதைத் தாண்டி வா! அம்மா பெஸ்ட் என்ற உன் கருத்தை உள்ளத்தின் ஆழத்தில் மட்டும் வைத்துக்கொள். வார்த்தைகளில் உன்னவளுக்குத் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. தாய் சொல்லைத் தட்டாதே! சிறிய முகமூடிதான். அதைத் திறம்படப் பயன்படுத்து! அது எல்லோரையும் மகிழ்விப்பதைப் புரிந்துகொள்வாய்.
தாய்க்குப் பின் தாரம்!

         நலங்கு மஞ்சள் காயும் முன்பே பிரம்மதண்டத்தைத் தலையில் வைத்தது போல் எங்க அம்மா ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறார்கள்., அவர்களை அனுசரித்துக் கொண்டு போக வேண்டும் என்ற வசனங்களைப் பேசாதே! அப்படிச் சொன்னால் அவளுக்கு மனதில், அப்படியானால் அம்மா பிள்ளையாகவே இருக்க வேண்டியதுதானே. அப்புறம் எதுக்கு நான்? என்று சிறு கசப்பு உணர்வு தோன்றும். அவள்தான் உன் உலகம் என்பதை அவளுக்குப் புரியவை. அம்மாவும் அப்பாவும் சண்டை போட்டுக் கொள்வார்கள் என்றும் சொல்லாதே! அதையே என்றாவது உன் மீது திருப்பக் காரணமாக நீ இருக்கக்கூடாது. சண்டையில்லாவிட்டால் நீ கேட்டதெல்லாம் கிடைத்திருக்குமா?
              
            காபியை உறிஞ்சிக் குடிக்காதே. உனக்கொரு மனைவி வந்தால், நல்லா வளர்த்திருக்கா என்று என்னைக் குறை சொல்வாள் என்று அடிக்கடி சொல்வேனே. இன்று உன்னுடைய நடை உடை பாவனையில் உயர்வைக் கண்டு நான் பூரிக்கிறேன். வரப் போகிறவள் பெருமையடைவாள். நல்ல ஆசானாகப் பணி ஆற்றிய நிறைவு எனக்கு.

தாயா? தாரமா?

     அம்மா சமையலைத் தவிர வேறொன்றும் நீ அறியாததால் அது மிக உயர்வாக உனக்குத் தோன்றுவதில் வியப்பில்லை. இருந்தாலும் வார்த்தைக்கு வார்த்தை, எங்க அம்மா செய்கிற மாதிரி சேப்பங்கிழங்கு ரோஸ்ட், முருங்கைக்காய் சாம்பார் மாதிரி வராது என்று ஒப்பிட்டுப் பேசாதே! உன் அம்மாவுக்கு உன் மனைவியாகப் போகிற பெண்ணைப் போலக் கார் ஓட்டவும், வங்கிப் பணி ஆற்றவும், டைம் மேனேஜ்மெண்ட்டும் தெரியாதப்பா! நான் அன்றைய கெட்டிக்காரி! இவள் இன்றைய மங்கை!
அம்மாவின் கட்டளைகள் ஆறு!

       உனக்கு உன்னிடம் உள்ள பேரன்பை மனதில் கொண்டு நான் சொல்லும் அறிவுரைகள் ஆறு:
1. அம்மா புராணம் பாடாதே!
2. அம்மாவோடு ஒப்பிடாதே!
3. அம்மாவைக் கொஞ்சம் பீடத்திலிருந்து இறக்கி வை. அவளும் சற்று இளைப்பாறட்டும்!
4. அம்மா தேவைப்பட்டபோதெல்லாம் உதவிக்கு வருவாள் என்பதை மட்டும் சொல்லி வை!
உன்னவளுடைய அம்மாவையும் மதிக்கக் கற்றுக் கொள்! ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி...
நீடூழிவாழ வாழ்த்துக்கள்...!
பி.கு.
மாமனாரை உயர்த்திப் பேசுவதால் மருமகளுக்கு எந்தவித கசப்பும் ஏற்பட்டதாகச் சரித்திரமே கிடையாது!

பெண்கள் மெட்டி அணிவதன் மருத்துவ ரகசியம்!..


meddy_a

பழங்காலத்தில் மெட்டி அணிவது ஆண்களின் அடையாளமாகவே இருந்து வந்துள்ளது.
...
பின்னாளில் அந்த மெட்டி பெண்களின் சொத்து ஆகிவிட்டது.
அதிலும் திருமணமான பெண்கள் தான் மெட்டி அணிய வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

இது வெறும் சம்பிரதாயம் மட்டுமல்ல,
அதற்கு பின்னால் உள்ள அறிவியலையும் தெரிந்து கொள்ளுங்கள் .
பெரும்பாலான திருமணமான இந்திய பெண்கள் கால்களில் மெட்டி அணிவார்கள்.

மெட்டி அணிவது திருமணம் ஆனதற்கு அடையாளம் மட்டுமல்ல,
அது அறிவியலும் கூட.

பெண்கள் இரு கால்களிலும் மெட்டி அணிவதால், அவர்களின் மாதவிடாய் சுழற்சி சீரான முறையில் செயல்படும்.
மேலும் மெட்டி அணிவது திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் நல்ல நோக்கத்தை அளிக்கிறது.

அது மட்டுமல்லாமல், பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலான நடு விரலில் ஓடும் நரம்பானது பெண்களின் கருப்பையுடன் இணைந்து இதயம் வழியாக செல்கிறது என்று கூறப்படுகிறது.

ஆகவே பெண்கள் மெட்டியை பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலில் அணிவதன் மூலம் கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும், கர்ப்பப்பையில் இரத்த ஓட்டம் சீராகவும் பாதுகாக்கப்படுகிறது.

வெள்ளி ஒரு நல்ல கடத்தி (Good Conductor) என்பதால், பூமியின் துருவத்தில் இருந்து நிறைய ஆற்றலை உள்வாங்கி, உடல் முழுவதும் புத்துணர்ச்சியைப் பரவ செய்கிறது….!

திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் பெருத்துவிடும்; காரணம் என்ன தெரியுமா .?

 எப்போதும் ஸ்லிம் ஆக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள்கூட, திருமணத்திற்கு பிறகு எக்குதப்பாக சதை போட்டுவிடுகிறார்கள்.
...
         அதுவும், ஒரு குழந்தை பிறந்துவிட்டால் இன்னமும் கூடுதலாக குண்டாகிவிடுகிறார்கள்.
          ஏன்? ஒரு பெண் திருமணம் ஆனபிறகு மட்டும் குண்டாகிறாள்?
என்கிற நோக்கில் ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
10 வருடங்களாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 18 முதல் 23 வயதுவரை உள்ள சுமார் 6,500 ஆஸ்திரேலிய பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் திருமணத்திற்கு முன்பு என்ன உடல்நிலையில் இருந்தார்கள்?
திருமணத்திற்கு பிறகும், குழந்தை பிறந்த பிறகும் அவர்களது உடல்நிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன?
என்று பல விஷயங்களை ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர். ஆய்வின் முடிவில், திருமணம் செய்து கொள்ளாத பெண்கள் 10 ஆண்டுகளில் 11 பவுண்டும் (ஒரு பவுண்ட் என்பது சுமார் 450 கிலோகிராம்), திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளாத பெண்கள் 15 பவுண்டும், திருமணமாகி குழந்தையும் பெற்றுக்கொண்ட பெண்கள் 20 பவுண்டும் கூடுதல் உடல் எடை பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
 
            ஒரு பெண்ணின் அதிகப்படியான உடல் எடை அதிகரிப்பு, அவள் திருமணம் செய்து கொண்ட பின்னர்தான் ஆரம்பமாகிறது.  முதல் குழந்தை பிறந்த பிறகு அவளது உடல் எடை இன்னும் அதிகமாகிறது.
அதே பெண் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும்போதும் அவளது உடல் எடை அதிகரிக்கிறது. ஆனால், இந்த உடல் எடை முதல் குழந்தை பெற்றபோது அதிகரித்த உடல் எடையைவிட சற்று குறைந்ததாகும்.
இந்த உடல் எடை அதிகரிப்பு, அந்த பெண்களுக்கு எதிர்கால வாழ்க்கையில் பல பிரச்சினைகளை கொண்டு வந்துவிடுகிறது.  அதை தவிர்க்க வேண்டும் என்றால் அவர்களது உணவு பழக்கவழக்கத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும்.
 
             திருமணம் முடிந்த பிறகு உறவினர்களில் புதுமண தம்பதிகளை அழைத்து விருந்து கொடுப்பார்கள்,  இப்படி இரண்டு மாதம் ஒவ்வொரு உறவினர் வீட்டிலும் விருந்து கொடுத்தால் பெண்கள் ஒல்லியாகவா? இருப்பார்கள்.  பிரசவ காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள உடம்பில் தெம்பு வேண்டும் என்பதற்காக அதிக உணவுகளை உட்கொள்ள சொல்வார்கள் இதுவும் எடையை அதிகப்படுத்தி விடுகின்றது. இப்போதெல்லாம், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் பாஸ்ட் புட் வகைகளைத்தான் பெண்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
இதனால் அவர்களது உடல் எடை அதிகப்படியாக கூடுதலாகிறது.
மேலும், இன்றைய பெண்களுக்கு உடல் உழைப்பும் குறைந்துவிட்டது.
அதிக நேரம் தூங்குகிறார்கள். இதுவும் அவர்களது உடல் எடை அதிகரிக்க மற்றொரு முக்கிய காரணம்.  அதனால், தினமும் மூன்று வேளை உட்கொள்ளும் உணவின் அளவை குறைப்பதோடு, தேவையான உடற்பயிற்சியையும் தினமும் செய்து வந்தால், அதிகப்படியான உடல் எடையை குறைக்கலாம்.

குழந்தைகளுக்கு உணவு ஊட்டும்போது பொறுமை மிகவும் அவசியம்....

குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது ஒரு கலை. ஆனால் அதையே மிகவும் கஷ்டமான காரியமாக நினைத்து குழந்தைகளை உண்ணவைக்க பாகீரத பிரயத்தனம் செய்கின்றனர் சில பெற்றோர்கள்.
ஏனெனில் கொடுக்கும் உணவை, வயிறு நிறையும் வரையில் சமர்த்தாக சாப்பிடும் குழந்தைகள் மிகக்குறைவு. சில குழந்தைகள் உணவை விழுங்காமல் அப்படியே வெளியே தள்ளிவிடுவார்கள். குழந்தைகளின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய அவர்களுக்கு ஏற்ற உணவுகளை தயாரித்து அளிக்கவேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள். அவர்கள் தரும் ஆலோசனைகள் உங்களுக்காக...
ருசியான உணவு
         குழந்தைகளுக்கு மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை சிறிதளவு ஆகாரம் கொடுப்பது அவசியம். அதில் மூன்று முறை சாதம், காய்கறி உள்ளிட்ட உணவுகளும், இருமுறை சிநாக்ஸ்வகையாகவும், பின்னர் ஜூஸ், பால் போன்றவகையாகவும் இருப்பது அவசியம். தயிர் சாதம், காரட் மசியல், பழக்கூழ் என குழந்தைகளுக்கு பிடித்தமாதிரியான உணவுகளை தயாரித்து அளிப்பது அவர்களின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும்.
தானியங்கள், பயிறு, பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் என குழந்தைகளின் உணவுகளை திட்டமிட்டு தயாரித்து அளிக்கவேண்டும். புரதச்சத்து நிறைந்த மாமிச உணவுகள், சீஸ், பீன்ஸ் போன்றவைகளைக் கொண்டு தயாரித்த உணவுகளை அளிக்கவேண்டும். பிரட், ஆப்பிள், சூப், போன்றவைகளை இரவு நேரங்களில் கலர்புல்லாக தயாரித்து அளித்தால் குழந்தைகள் ஆர்வமுடன் சாப்பிடுவார்கள்.
சரியான அளவு
          குழந்தைகளின் வாய்க்குள் எந்த அளவிற்கு உணவு பிடிக்குமோ அந்த அளவிற்கு மட்டுமே உணவுப்பொருளை வைக்கவேண்டும். அதிகமாக சாப்பிடவேண்டும் என்பதற்காக எக்கச்சக்க உணவுகளை திணிப்பதால் தொண்டைக்குழியில் சிக்கி குழந்தைகள் சிரமப்படும். அதுவே உணவின் மீதான வெறுப்பை ஏற்படுத்திவிடும்.
ஊட்டச்சத்து உணவுகள்
            புதிய வகை உணவுகளை அறிமுகப்படுத்தும் போது குறைந்த அளவு கொடுத்து குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுகிறதா? என்பதை கவனித்து பின்னர் உணவை அளிக்கவேண்டும். குழந்தைகளுக்கு வறுத்த, பொரித்த உணவுகளை கொடுப்பதை விட நார்ச்சத்துள்ள உணவுகளை அறிமுகப்படுத்தினால் அவர்களுக்கு வயிறு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
ஜங்க் ஃபுட் வகைகளைகளை அதிகம் தருவதற்கு பதிலாக மாலை நேரங்களில் பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் உணவுகளை பழக்கப்படுத்துவது அவர்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க வழி ஏற்படும்.
பொறுமை அவசியம்
           
               குழந்தைகள் இயல்பிலேயே வாயில் படும் பொருட்களை வெளியில் தள்ள முயற்சி செய்யும். நாளடைவில் அந்த பழக்கம் மாறிய பின்னர் உணவை விழுங்கத் தொடங்கும். அதனால், நாம்தான் பொறுமையாக உணவை அவர்களுக்கு ஊட்டிவிட வேண்டும்.
              குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டே மெதுவாக உணவு ஊட்டவேண்டும். குழந்தையில் நாவில் உள்ள சுவை நரம்புகளுக்கு ஏற்ப உணவை ருசியாக தயாரித்து அளித்தால் குழந்தைகள் உணவு உட்கொள்வார்கள்.
ஸ்பூன் எச்சரிக்கை
           
              இன்னும் சில குழந்தைகளுக்கு முதன் முறையாக ஸ்பூன் கொண்டு உணவை கொடுக்கும் போது பிடிக்காமல் போகலாம். உணவை சாப்பிட மறுத்தால், நமது ஆள்காட்டி விரலை நன்கு சுத்தமாக கழுகி அதில் உணவை சிறிய அளவில் தடவி குழந்தைக்கு கொடுக்கலாம். உணவு சுவை பழகிய பின்னர் ஸ்பூன் கொண்டு கொடுக்கலாம்.
             குழந்தைகளுக்கு ஸ்பூன்கள் கொண்டு உணவு ஊட்டும் போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சிறு குழந்தைகள் மிக வேகமாக கையால் தட்டிவிடும். அப்போது குழந்தையின் வாயில் அல்லது முகத்தில் ஸ்பூன் பட்டு காயம் ஏற்பட்டுவிட வாய்ப்பு உள்ளது.
அதனால், எக்காரணம் கொண்டும் கூர்மையான, வெட்டும்படி உள்ள சில்வர் ஸ்பூன்களை உபயோகிக்கக் கூடாது. குழந்தைகளுக்கு என்றே உள்ள பிரத்தியோக குட்டி ப்ளாஸ்டிக் ஸ்பூன்களை பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது.
முன் உதாரணம்
               நம்முடைய உணவுப் பழக்கமே குழந்தைகளை தொற்றிக்கொள்ளும். ஊட்டச்சத்து எதுவும் இல்லாத உணவுகளை பெற்றோர்களே ருசிக்காக வாங்கி உண்ணும் போது அந்த பழக்கம் குழந்தைகளை தொற்றிக்கொள்கிறது. எனவே வீடுகளில் நாம் சத்தான உணவுகளை தயாரித்து உண்பதனால் அதனை குழந்தைகளுக்கு வழங்க முடியும். அவர்களுக்கும் சரிவிகித சத்துணவு கிடைக்கும். எனவே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு நம்முடைய உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வது நலம் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.

கர்ப்பமாக இருக்கும் உங்கள் மனைவியிடம் சொல்லக்கூடாத 12 விஷயங்கள்!!!

07-1402133421-5pregnantwomancryingகர்ப்ப காலத்தின் போது, கர்ப்பிணி பெண்ணின் உடம்பு முழுவதும் தொந்தரவு கொடுக்கும் ஹார்மோன்கள் பாய்ந்தோடும். இந்நேரத்தில் தான் ஒரு பெண்ணின் உண்மையான நிறம் தெரிய நேரிடும். கர்ப்ப காலத்தின் போது, ஹார்மோனால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களை கையாளும் ஆண்களுக்கு பதக்கம் தான் அளிக்க வேண்டும். இருப்பினும், இவ்வகை ஆண்கள் தான், குழந்தையை சுமக்கும் தங்கள் அழகிய மனைவியிடம் இனிமையான விஷயங்களை கூறுவார்கள். கர்ப்பிணி பெண்ணை அக்கறையுடன் கவனித்துக் கொள்ள வேண்டும். அவளுக்கு அன்பை வாரி வழங்க வேண்டும். முக்கியமாக அவளுக்கு அதிக முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும். இதனை செய்ய ஒரு கணவன் தவறினால், அவனுக்கு தான் பிரச்சனை. கர்ப்பம் என்றால் ஆண்களுக்கும் சில கஷ்டங்கள் தான். என்றாலும் கூட, இவ்வகையான நேரத்தில் மனைவியிடம் சொல்லக்கூடாத சில விஷயங்கள் உள்ளது.
                
             மீண்டும் சாப்பிடுகிறாயா? கர்ப்ப காலத்தில் எப்போதும் நல்ல உணவு வகைகளை உண்ண வேண்டும். உங்கள் மனைவி கர்ப்பமாக இருக்கையில், உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் அவருக்கு பல உணவுகளை எடுத்துக் கொடுத்து உண்ண வற்புறுத்துவார்கள். அதனை உண்ண வேண்டுமானால் ஒரு நாள் போதாது.

            வீடு குப்பையாக உள்ளது கர்ப்பிணியான மனைவியிடம் சொல்ல கூடாத விஷயத்தில் இதுவும் ஒன்று. வீடு சுத்தமாக இல்லையென்றால் வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ளுங்கள் அல்லது நீங்களே சுத்தப்படுத்துங்கள்.

 
             குழந்தைக்கு பெயர்கள்? மீண்டும்! குழந்தைக்கு பெயரை தேர்ந்தெடுக்கும் ஆனந்தத்தை பெண்கள் கண்டிப்பாக உணர்வார்கள். இதனை கொடுமையாக எண்ணும் சில ஆண்களும் உண்டு.
             
             வேகமாக நட கர்ப்பிணி மனைவியின் வேகத்திற்கு ஈடு கொடுக்காமல், அவளை வேகமாக நடக்க அதட்டுவதும் தவறு. கர்ப்பிணியான மனைவியிடம் சொல்லக்கூடாத மற்றொரு விஷயம் இது.
            
             அழ ஆரம்பித்து விட்டாயா? கர்ப்பிணியான உங்கள் மனைவியிடம் சொல்லக்கூடாத முக்கியமான விஷயம் இது. ஹார்மோன் சமமின்மையால் தான் அவர்கள் சில நேரம் அழுவார்கள். அதனால் பழகிக் கொள்ளுங்கள்.

           குழந்தை பற்றிய புத்தகங்கள் அலுப்பு தட்டுகிறது குழந்தை வளர்ப்பு பற்றிய சில புத்தகங்களை உங்கள் மனைவி உங்களிடம் கொடுத்தால் அதனை அவளுடன் அமர்ந்து படியுங்கள். குழந்தை பிறந்த பிறகு நல்ல தகப்பனாக மாற இது உதவிடும்.
 
              கர்ப்ப காலம் எனக்கு கஷ்டமாக உள்ளது கர்ப்பிணி மனைவியிடம் சொல்லக்கூடாத மற்றொரு விஷயம் இது. உங்களுக்கு அப்படி ஒரு எண்ணம் ஏற்பட்டால், அதனை உங்கள் நெருங்கிய நண்பருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இதை உங்கள் மனைவியிடம் சொன்னால் அவருக்கு டென்ஷன் தான் அதிகரிக்கும்.

              நான் இன்னும் தயாராக இல்லை ஐயோ, இது ரொம்பவும் முக்கியம். வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதை போன்று இருக்கும். அதனால் கர்ப்பிணியான உங்கள் மனைவியிடம் சொல்ல கூடாதா விஷயம் இது.

         நான் மருத்துவமனைக்கு வர வேண்டுமா? மருத்துவரை சந்திக்க வேண்டிய நேரத்தில், ஒரு கணவனாக நீங்களும் அங்கே இருப்பது அவசியம். இது உங்கள் மனைவிக்கு சந்தோஷத்தை அளிக்கும்.

             ஏன் எப்போதும் சோர்வாக இருக்கிறாய்? கர்ப்ப காலத்தில் உங்கள் மனைவியிடம் ஏன் இவ்வளவு சோர்வாக இருக்கிறாய் என்பதையும் கண்டிப்பாக கேட்காதீர்கள். மாறாக எவ்வளவு அழகாய் இருகிறாய் என புகழ்ந்து அவர்களை உற்சாகப்படுத்துங்கள்

நீங்க கொடுக்கும் முத்தம் சும்மா ‘நச்’சுன்னு இருக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்…...




    முத்தமிடுதல் என்றால் நினைக்கும் போது சுலபமாகத் தான் தெரியும். ஆனால் உண்மையில் முத்தமிடும் போது தான் நீங்கள் முத்தமிடுவதில் சிறந்தவர் அல்ல என்பதை உணர்வீர்கள். முத்தமிடுவதில் சிறந்தவராக விளங்கி, உங்கள் காதலி அல்லது மனைவியை சொக்க வைத்து, உங்கள் அன்பில் விழச் செய்ய, இதோ உங்களுக்காக சில ரொமான்டிக் டிப்ஸ்.
நீங்கள் யாராக இருந்தாலும் சரி, பொதுவாக பெண்களுக்கு அவர்களை அரவணைத்து முத்தமிட்டால் தான் பிடிக்கும். அவர்களை இடுப்பு, கழுத்து, கூந்தலின் இடைவெளி போன்ற இடங்களில் பிடித்து, அவர்களின் கண்ணை நோக்கி முத்தமிட வேண்டும் என்று தான் அவர்கள் எதிர்ப்பார்ப்பார்கள்.
உங்கள் முத்தம் சூடாகவும் சுவையாகவும் இருக்க, எப்படி முத்தமிடுவதில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்கான சில வழிகளை கூறியுள்ளோம்.
உங்கள் உறவில் மற்றொரு முக்கியமான அம்சம் ஒன்று உள்ளது – உங்கள் காதலி அல்லது மனைவியை ஒவ்வொரு கால கட்டத்திலும் உடல் ரீதியாக சந்தோஷப்படுத்த வேண்டும்.ஒவ்வொரு பெண்ணும் தன் காதலன் அல்லது கணவன் தன்னை அரவணைத்து, காதலின் தேவையை அந்த உறவின் மூலம் உணர வேண்டும் என்று விரும்புவாள்.
            ஆண்களே, உங்கள் உறவு சொர்க்கமாக இருக்க வேண்டும் என்றால், முத்தமிடுவதில் எப்படி வல்லுனராக மாற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.அவளின் கண்ணை நோக்குங்கள்.அவளின் அருகில் நெருக்கமாக வந்து, நேரடியாக அவளின் கண்களை பார்த்து, அந்த தருணத்தை உணருங்கள். உடல் மொழியை அறிந்து கொள்வதன் மூலமாக மட்டுமே ஒரு உறவில் நீங்கள் மிகச்சிறந்த முத்தமிடுபவராக திகழலாம்.
 
            நெருங்கி வந்து அரவணைத்து கொள்ளுங்கள்.அவளுக்கு மிக அருகில் வந்தவுடன், அவளை மென்மையாக பிடித்துக் கொள்ளுங்கள். அவளை உங்கள் நெஞ்சின் அருகில் இழுத்து,அவளின் நாடியை உங்கள் வாயின் திசை நோக்கி வைத்திடுங்கள். செயலில் இறங்க முதல் ஆளாக களமிறங்குங்கள்
நீங்கள் உங்கள் உறவில், முத்தமிடுவதில் சிறந்தவராக விளங்க இதோ மற்றொரு டிப்ஸ் – அவளின் சுவைமிகுந்த செர்ரி பழ உதடுகளை சுவைக்க நீங்களே முதலில் களத்தில் குதியுங்கள். அவளின் உதடுகளை லேசாக கொத்தி, பின் அதனை சுவைக்க தொடங்குகள். நாவுகளோடு விளையாட்டு
உங்களின் நாக்கை மெதுவாக அவளின் வாயில் நுழைத்து அப்படியே சுழற்றுங்கள். அவள் வாயில் உங்கள் நாவின் திடத்தை அவள் உணரட்டும். இப்படி விளையாடு போது, உங்கள் உறவில் நீங்கள் சிறந்து முத்தமிடுவீர்கள். ஒரு சிறந்த முத்தம் தொடங்குவது இப்படி தான்.
செல்லமாக கடியுங்கள்
முத்தமிட்டு கொண்டிருக்கும் போது, அவளின் உதடுகளை செல்லமாக கடியுங்கள். அது கீழ் உதடாக இருந்தாலும் சரி, மேல் உதடாக இருந்தாலும் சரி. இருப்பினும் சிறந்த முறையில் முத்தமிட வேண்டும் என்றால், நாவை கடித்து விடாதீர்கள்.புன்னகையை மலர விடுங்கள்.நீங்கள் முத்தமிடுவதில் சிறந்து விளங்க அப்போப்போ புன்னகையையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவளுக்கு நீங்கள் முத்தமிட்டு கொண்டிருக்கும் போது, பாதியில் லேசாக விலகி, அவள் மீது ஒரு புன்னகையை தூவுங்கள். அப்படி செய்யும் போது அந்த தருணத்தை அவளுக்கு அது உணரச் செய்யும். அவள் உங்களை பார்த்து மீண்டும் புன்னகைக்கும் போது, அவளின் உதடுகளை மீண்டும் சுவைக்க தொடங்குங்கள்.
 
           அவள் வாயில் உங்கள் மூச்சை செலுத்துங்கள்.உங்கள் முத்தம் சிறப்பாக மாற, அவள் வாயில் மென்மையாக மூச்சு விடுங்கள். அவள் வாயில் உங்கள் மூச்சுக் காற்று நுழையும் வேளையில், அவளுக்கு கண்டிப்பாக அந்த தருணம் விசேஷமானதாக மாறும்.உங்கள் ரசங்களை பரிமாறுங்கள்.
         கடைசியாக, உங்கள் உறவில், நீங்கள் முத்தமிடுவதில் சிறந்து விளங்க, முத்தமிடும் போது, உங்கள் எச்சில்களை பரிமாறிக் கொள்ளுங்கள். உங்கள் முத்தம் சிறந்த ஒன்றாக இருக்க, இதுவே முத்தத்தின் சிறப்பான முற்றாக இருக்கும்