காதல் கவிதைகள்

அவளை
காதலிக்கும்
போது
எவளையும்
பிடிக்கவில்லை..!...
ஆனால்...
அவள் போன
பிறகு
காதலிக்கவே
பிடிக்கவில்லை..!

நீ பேசாவிட்டலும் நான் பேசுகிறேன்
என்று என்னை இழிவாக
நினைக்காதே...!!
என்னால்
உன்னை விட்டு ஒரு துளியேனும்
விலகிச் செல்ல முடியவில்லை...!
உன் மீது கொண்ட அன்பு,அக்கறை,காதல்
தான் காரணம்...!
காதலித்த நாள் முதலாய் உன்னை என்
கைக்குழந்தையாகவே கண்ட
எனக்கு திடீரென்று நீ
என்னை விட்டு சென்றது போல என்னால்
விலகிட முடியவில்லை...!
என்னை மன்னித்து விடு...!
உனக்கு பிடிக்காத ஒன்றை உன்னிடம்
கேட்கிறேன்.... தயவு செய்து என்
நிலை புரிந்து திரும்பி வா என்னிடம்
என்னவனாக.

நீ யார வேணாலும்
கல்யாணம் பண்ணிக்கோ...
அவன் கூட வாழ்க்கைய
எப்படி வேணாலும்
சந்தோசமா வாழ்ந்துக்க...
ஆனா.................
நீ மனசில ஒன்னே ஒன்னு மட்டும்
வச்சுக்க,
உன்ன மட்டுமே கடைசி வரைக்கும்
நினச்சுகிட்டே ஒருவன் இருந்தால்
உன்னை மறக்கவும் முடியாம,
நினைக்கவும் முடியாம கஷ்டப்பட்டால்
ஒரு காலத்துல நாம அவன
காதலிச்சோம் அப்டீனு
உன் வாழ்கையில
எப்பயாவது நினைச்சா போதும்...
எழுதுகிறேன் உன்னை எண்ணி,
நான் எழுதும் வரிகள் உனக்காகவும்,
அந்த வரிகளின் வலிகள் எனக்காகவும்...
உன்னை குறை சொல்லி
கவிதையெழுத விருப்பமில்லை
விலகி நிற்கும் போதிலும்
வாழ்கிறாய் என்னுள்ளே... .
No comments:
Post a Comment