Friday, 15 August 2014

சுகமான வலிகளை தரும் பள்ளி தருணங்கள்...

 

அம்மாவிடம் இருந்து பிரிந்து போக முடியாமல்
அழுத தருணம்
நாலு பேர் சேர்ந்து நம்மை பள்ளிக்கு இழுத்து சென்றாலும் நம் வீட்டையே திரும்பி திரும்பி பார்த்த தருணம்
வேர்வையை சட்டையிலே துடைத்துவிட்டு விளையாடிய தருணம்
ஆசிரியர் அடித்தால் வலிக்க கூடாது என்பதற்காக இரண்டு கால்சட்டையை போட்டு பள்ளிக்கு சென்ற தருணம்
என்னிடம் ரப்பர் வைத்த பென்சில் இருக்கிறது என பெருமைபட்ட தருணம்
புதிதாக வாங்கிய பேனாவை நண்பனிடம்
காட்டி சந்தோஷபட்ட தருணம்
வகுப்பு நடைபெறும் போது நண்பனிடம் புத்தக
கிரிக்கெட் விளையாடின தருணம்
நண்பர் மை இல்லாமல் தவிக்கும் போது பெஞ்சின் மேல் மை தெளித்து உதவிய தருணம்
போர்டில் நம்ம பெயர் மி.மி.அ என்ற பட்டத்துடன் இருந்தால் நான் தாம்ல இந்த
வகுப்புக்கு ரவுடி என சொல்லிக்கொண்ட
தருணம் (மி.மி.அ- மிக மிக அடங்கவில்லை)
சனி,ஞாயிறு விடுமுறை என்றாலும் மழைக்காக விடுமுறை விட்டால் அளவில்லாத
சந்தோஷத்தில் துள்ளி குதித்திருப்போம்
எல்லா நாட்களும் தாமதமாக செல்லும் நாம்
பிறந்த நாள் என்றால் மட்டும் சீக்கிரமாவே பள்ளிக்கு செல்ல துடித்திருப்போம்.
விடுமுறை நாளில் பிறந்த நாள் வந்தால்
வருத்தப்படுவோம்
அனைவரது சாப்பாட்டையும் சாதி,மத பேதம்
பார்க்காமல் பகிர்ந்து உண்டு மகிழ்ந்தோம்
ஒன்பது மணி ஆனால் வருத்தப்பட்டோம்,
நான்கு மணி ஆனால் சந்தோஷபட்டோம்...
இப்போ அந்த நாளுக்காக ஏங்கி நிற்கின்றோம்...!!!
இதை நீங்கள் அனுபவித்திருந்தால் பகிருங்கள்.

Sunday, 10 August 2014

புதுக்குறள்

1.அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-
ருசிக்காதே மனைவி சுட்ட தோசை...
...
2.முதுகில் குத்துவோரை ஒறுத்தல் அவர் மூக்குவீங்க
மூஞ்சியில் குத்தி விடல்...

3.கள்ளஓட்டு லஞ்சம் வெட்டுக்குத்து இந்நான்கும்
செய்வது அரசியல்வாதிக்கியல்பு...

4.யாகாவாராயினும் Password காக்க காவாக்கால்
சோகாப்பர் hack செய்யப்பட்டு.

5.விரும்பிய மனம் விரும்பா விடின்
துரும்பா இளைப்பார் தூய காதலர்..

6.ரன் எடுத்து ஆடுவாரே ஆடுவார்...
மற்றெல்லாம் டக்கெடுத்து பின் செல்பவர்

7.CHAT எனில் FB-CHATசெய்க இல்லையேல்
CHATடலின் CHATடாமை நன்று

8.மாவினால் சுட்ட வடை உள்ளாறும் ஆறாதே
வாயினால் சுட்ட வடை

9.மொக்கை போடுதல் எல்லார்க்கும் எளிது
அரியவாம் கடலைபோ டுதல்

10.பீடியால் சுட்ட புண் உள்ளாறும்
ஆறாதே லேடியால் கெட்ட மனம்

11.கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை தன் திருமணத்தன்று
தாகசாந்தி செய்ய மறுக்கும் நண்பனுக்கு

12.போடுக கடலை போடுக போட்டபின் பில்லு
கட்டுக அதற்குத் தக...

Saturday, 9 August 2014

இளைய சமுதாயம் ABCD

A னது டைரிகளில்.....

B ரிந்து போன உன் நினைவுகள்...

C தறிய கணணாடியில்.........
D னமும் உன் பிம்பங்கள்.......
E தயங்கள் பிரிந்தாலும்.......
F ப்பொழுதும் உன் ஆசைகள்.......
G வனுக்குள் உறைந்து போன......
H சரிக்கை கருவிகளாய்.........
I ந்து மணி ஆனவுடன்.......
J ன்ம சந்தோஷமடைந்த நாட்கள்........
K ட்காமல் நீ வாங்கித் தந்த..........
L ல்லா வற்றிலும்.........
M னதிற்குள்ளும்.......
புன்னகை வரசசெய்து........
N றும்மே உன்னை நினைத்து.......
O ரு நாளும் இல்லாத திருநாளாய்......
P ன்வீட்டு ஜன்னலிலிருந்து நீ........
Q டுததுனப்பிய காதல் கவிதைகல்.......
R வமுடன் நான் அதை பார்த்து........
S ரமமின்றி என் காதலை சொல்ல நீயோ.......
T ருத்தி விடு இது நடக்காதென்றாய். .......
U கம் அனைத்தும் உனக்குள்.......
V ழுந்து போன இலைச் சருகுகளாய்..... ..
W edding கடையில் நீ வாங்கித் தந்த
கார்டுக்கு.....
X சாம்பிளாக இருப்போம் என்றாய்........
Y ந்து போகாமல் இன்னும் நம் காதல்........
Z oom ஆகிக் கொண்டு கனாக்
காண்கிறதே...

உங்களை விட உயர்ந்தவர் யார்....




உங்கள் பாத்திரத்தில் உணவிருந்தால்..
உடுத்த உடையிருந்தால்.. ...
தலை மேல் கூரையிருந்தால்..
உறக்கம் கொள்ள இடமிருந்தால்..
உலகின் 75 சதவிகித மக்களை விட நீங்கள் மேலானவரே!

உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இருந்தால்..
உங்கள் பர்சில் சிறிது சில்லறை இருந்தால்..
உலகின் முதல் 8 சதவிகித பணக்காரர்களில் நீங்களும் ஒருவரே!

நோய், நொடியின்றி, புத்துணர்ச்சியோடு உங்கள் பொழுது புணர்ந்தால்..
அதே நாளில் இறக்கப் போகும் கோடி மக்களை விட நீங்கள் அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டவரே!

நீங்கள் போரின் அனுபவம் பெறாதிருந்தால்..
எந்த வித சித்திரவதைக்கும் உள்ளாகாதிருந்தால்..
தினம் தினம் செத்துப் பிழைக்கும், கோடானு கோடி மக்களை விட நீங்கள் அதிர்ஷ்டசாலிகளே!

மேற்கூறியவைகளை தங்களால் படித்துப் பார்க்க முடிந்தால்..
பார்வையற்றுக் கிடக்கும் 3 கோடி சக மனிதர்களை விடவும் நீங்கள் அதிகம் கொடுத்து வைத்தவர்களே!!!

Thursday, 7 August 2014

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :-








01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
02. மனது புண்படும்படி பேசக் கூடாது.
03. கோபப்படக்கூடாது.
04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
05. பலர் முன் திட்டக்கூடாது.
06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
09. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

Wednesday, 6 August 2014

பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்:


 

ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. இந்த பிரச்சனை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு....

1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்' ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபாய் செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..

2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்'ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட் )

3. அவங்க பேரோட முதல் எழுத்தை பைக் கீ- செயின்'ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க...

4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலாக் விடணும்'ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)

5. அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கால் பண்ண சொல்லுங்க. அந்த பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.

6. கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்'ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

7. "நீ ரொம்ப அழகா இருக்கே"ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)

8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஆர்டர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஆர்டர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்'ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)

9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், " இந்த ட்ரஸ்'ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வெச்சிட்டு பொய் சொல்லணும்". (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)

10. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.
இந்த விஷயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வெச்சு கொண்டாடுவாங்க. 

காதல் பிரிந்த பின் ஒரு நாள் அலைபேசியில்.!



பதட்டம் இல்லாத குரலில் அவள்,
என்ன சொல்ல போகிறாள் என்ற
கலக்கத்துடன் மறுமுனை அவன்,
நீ எப்படி இருக்கிற என்ற அவன்...
கேள்விக்கு அவள் பதில்கள்...
நான் ரொம்ப
சந்தோஷமா இருக்குறேன்,
நீ என்னை பிரிந்த பின்னும்
எனக்கு ஒண்ணும் வலிக்கல்ல,
எனக்கு கண்ணீர் ஒண்ணும் வரல்ல,
நீ சொன்ன மாரி நான் எப்பவும்
சிரிச்சுகிட்டு தான் இருக்குறேன்,
நீ என்ன நெனச்சு கஷ்ட்டபடாத,
இப்போ எல்லாம் உன்
நெனப்பு அதிகமா இல்ல,
உன்ன
மறந்துட்டேன்னு நினைக்குறேன்,
ஒரு வேள உன்ன விட அழகான, உன்ன
விட
பாசம் காட்டுற பையன்
எனக்கு கிடைக்கலாம்,
உனக்கும் நல்ல
பொண்ணு கிடைப்பா நான்
prayer பண்றேன்,
சரி அம்மா வந்துட்டாங்க நான் அப்புறம்
பேசுறேன்...
பெண்கள் கண்ணீரின் மறு பெயர்
அம்மா என்று யார்
மாற்றி வைத்ததோ!!!
புன்னகை வார்த்தையில் சிதற
விட்டவள்
கண்களில் ஏனோ கண்ணீர்!!!
கண்களில் வந்த கண்ணீர் அவள் இதயம்
நனைத்து குரலை கலைத்து அவன்
மனதிற்க்கு வேதனை தரும் முன்
பொய்யால்
அலைபேசி துண்டித்து அழுகிறாள்!!!
அம்மாவிடம் சொல்லி அழவும்
வழி இல்லை,
சோகங்கள் சொல்லி அழ அருகில்
தோழியும்
இல்லை!!!
அவனை நினைத்து தன் மனதில்
கதறி அழும்
குரல் கேட்க்க அவனும் அருகில்
இல்லை!!!
அனைத்து வலிகளையும் மனதில்
புதைத்து புன்னகையுடன்
உலா வரும்
நிலா தான் பெண் அவள்!!!
# நண்பா தெரியாமலும்
அவளை திட்டி விடாதே!!!
உன் காதல் நிலா மேல் என்றால் அவள்
காதல்
"வானம்" உன் மேல்!!!
# பிரிந்த பின் வருந்தி
நிற்க்காமல் புரிந்து
வாழ்வதே காதல்:)
காதலை இழந்து வலியுடன் வாழும்
நண்பர்களுக்கு .

Before Marriage and After Marriage

திருமணமான புதியதில் பெண்கள்:

1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்ககூப்பிட்டீங்களா? இதோ வரேன்.
2. எங்கம்மாவைப் பார்க்கணும் போலஇருக்கு. வாங்க இரண்டு நாள்
அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்
3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம்.
இனிமேல் செய்ய மாட்டேன்.
4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.
5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.
6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.
7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.
8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க.
9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா.

சிறிது ஆண்டுகள் கழித்து:
===================
1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க.பக்கத்தில்
வந்து சொல்லிட்டு போனா என்ன?
2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால்
போதும் புரியுதா??
3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை.
ஊறுகாய் போதும்ல?
4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.
5. ம்ம்ம்.உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.
6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான்
இருக்கு.
7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!
8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க
முடியுமா?
9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக்
கூப்பிடுவீங்க. நீங்க போங்க.
பல ஆண்டுகள் கழித்து:
=================
1. காதில் வாங்குவதே இல்லை.
2. போறவளுக்கு வர்ற வழி தெரியும்.யாரும்வர வேண்டாம்
3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க.
இல்லாட்டி போங்க.
4. ஒரு 5000 ரூபாய் மட்டும் வெட்டுங்க.புடைவையெல்லாம் நான்
பார்த்துக்கிறேன்.
5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.
6. போதும்.போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான்
மிச்சம்.
7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ...? வாயை மூடுங்க. கொசு போய்ட
போது.
8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?
9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்ட்டாம். என்
பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புலஇருக்கு.

ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்:


 




ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆனா கேட்க முடியாம மனசுக்குள்ளேயே புதைச்சு வெச்சுக்குற சில கேள்விகளை, நாம இந்தப் பதிவுல பார்க்கலாம்..

1. நாங்கதான் உங்களுக்கு ரீ-சார்ஜ் பண்ணி அனுப்புறோம். ஆனாலும் நீங்க எதுக்கு மிஸ்டு கால் கொடுத்தே எங்க உயிரை வாங்குறீங்க? உங்ககிட்ட ஃபோன்ல பேசின காசையெல்லாம் சேர்த்து வெச்சிருந்தா, நான் லோன் போட்டு பைக் வாங்கி இருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

2. ஒரு பொண்ணு கொடுக்குற மிஸ்டு காலை மட்டும் யாராலும் அட்டெண்ட் பண்ணவே முடியாது. அவ்ளோ ஷார்ப்பா கட் பண்ணுவாங்க. இப்படி மிஸ்டுகால் கொடுக்க நீங்க எந்த யுனிவர்சிட்டியில ட்ரெயினிங் எடுத்துகிட்டிங்க?

3. அது ஏன் எப்போ பார்த்தாலும், எது கேட்டாலும் ஹி.. ஹி'ன்னு சிரிச்சுகிட்டே இருக்கீங்க? ஒரு மணி நேரம் உங்ககிட்ட ஃபோன்ல பேசினா அதுல நாற்பது நிமிஷம் கேனத்தனமா சிரிச்சுகிட்டேதான் இருக்கீங்க. ஏன் நீங்க ஏதாவது பேஸ்ட் விளம்பரத்துல நடிக்கிறதுக்கு எங்ககிட்ட ட்ரெயினிங் எடுக்கிறீங்களா?

4. ஃபோன்ல நாங்களேதான் பேசிகிட்டு இருக்கோம். எதைக்கேட்டாலும் "நீங்க சொல்லுங்க, நீங்க சொல்லுங்க'ன்னா" நாங்க என்னத்தை சொல்லி தொலைக்குறது? உங்களுக்கு எதையுமே பேச தெரியாது போலன்னு நினைச்சு நாங்க பாட்டுக்கு எதையாவது சொல்லி தொலைச்சுடுவோம். அதையே மனசுல வெச்சுகிட்டு, கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கி கட்டிக்கிறது எங்களுக்கு மட்டும்தான் தெரியும். அது எப்படி பேசவே தெரியாத மாதிரி சீன் போடுறீங்க?

5. மெசேஜ்'ல மட்டும் ரொம்ப ரொமாண்டிக்கா SMS அனுப்பி எங்க தூக்கத்தை கெடுக்குறீங்க. ஆனா அதையே நேர்ல சொல்ல சொன்னா மட்டும் வெட்கத்தையே என்னமோ நீங்கதான் குத்தகைக்கு எடுத்த மாதிரி வெட்கப்படுறீங்க? இது எப்படி உங்களால மட்டும் முடியுது? மெசேஜ் அனுப்பும் போதெல்லாம் உங்க வெட்கத்தை என்ன ஃப்ரிட்ஜ்'க்கு உள்ளே ஒளிச்சி வெச்சிடுவீங்களா?

6. ஹேய்... உனக்கு எப்படி அது தெரியும்? அப்படிங்கிற கேள்வியை மட்டும் கேட்டுட்டா போதும். உடனே "நான் உங்க இதயத்துல தானே இருக்கேன். இது கூட எனக்கு தெரியாதான்னு" உடனே ஒரு டயலாக் விடுவீங்க. இந்த மாதிரி எல்லாம் டயலாக் விட டைரக்டர் கதிர்கிட்ட கத்துகிட்டீங்களா என்ன?

7. Loss of Pay' ல லீவு போட்டுட்டு, உங்களை பைக்ல தியேட்டருக்கு கூட்டிட்டு போனா, அப்பத்தான் ரொம்ப கவனமா ஹேண்ட் பேகை எடுத்து நம்ம ரெண்டு பேருக்கு நடுவுல வெச்சுகிட்டு வருவீங்க. என்ன கொடுமை சார் இதெல்லாம்?

8. அப்புறம் அப்புறம்'ங்கிற மொக்கையவே அரை மணி நேரமா போடுறீங்க. சரி வெச்சுடுறேன்னு நாங்க ஃபோனை கட் பண்ண போகும்போதுதான் "என் கூட பேசறது உங்களுக்கு போரடிக்குதா"ன்னு ஒரு சென்டிமென்ட் சீன் ஓபன் பண்ண வேண்டியது. உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி?

9. நீங்க கிஃப்ட் கொடுத்தா மட்டும் விலையைப் பார்க்க கூடாது. அதுல உங்க அன்பைத்தான் பார்க்கணும். ஏன்னா நிச்சயமா அந்த கிஃப்ட் கீ-செயினாவோ, கர்ச்சீஃபாவோ, இல்லை அதிகபட்சமா மணிபர்ஸாவோதான் இருக்கும். ஏன்னா அதுங்கதான் ஐம்பது ரூபாய்க்கு கிடைக்கும். ஆனா இதே நாங்க கிஃப்ட் கொடுக்கும் போது மட்டும் சுடிதாரோ, செல்ஃபோனோ, தங்க செயினோ, வெள்ளி கொலுசோ, குறைஞ்சது 3,000/- ரூபாய்க்கு செலவு பண்ணாதான் நாங்க உங்க மேல உண்மையான அன்பு வெச்சிருக்கிறதா அர்த்தம். என்ன கரெக்ட்டா? உங்க அன்போட அளவுகோலுக்கு எல்லையே கிடையாதா?

10. "உன் நியாபகமாவே இருந்துச்சு. ராத்திரி எல்லாம் தூக்கமே வரலை"ன்னு மனசாட்சி இல்லாம பொய் சொல்றீங்களே.. என் நியாபகமாவே இருந்துச்சினா என் கூட பேச வேண்டியது தானே. இந்தக் கேள்வியை நாங்க கேட்டுடக் கூடாதுனு அர்த்த ராத்திரியில பேய் முழிச்சுகிட்டு இருக்கிற நேரத்துல, ஒரு மிஸ்டுகால் கொடுத்துட்டு, மறுநாள் காலையில உனக்கு என் நியாபகமே இல்லைன்னே சண்டை போட வேண்டியது. இந்த விஷயத்துல சத்தியமா உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது.

11. நீங்க யூஸ் பண்ணி தூக்கி போட்ட பொருளை எல்லாம் நாங்க சேர்த்து வெச்சிருக்கணும்னு எதிர்பார்க்குறீங்களே, நாங்க என்ன நீங்க தூக்கி போடுறதை எல்லாம் சேர்த்து வெக்கிற குப்பை தொட்டியா?

நண்பர்களே இந்தக் கேள்விகளை எல்லாம் படிக்கிறதோட நிறுத்திக்குங்க. தப்பித்தவறி கூட இந்தக் கேள்விகளை நீங்க உங்க காதலிகிட்ட கேட்டீங்கன்னு வெச்சுக்குங்களேன்........அவ்வளவுதான் ஜோலி முடிஞ்சுது.

ஆண்கள் ஏன் சீக்கிரமா சாகறாங்க தெரியுமா..?

ஒரு ஆண் கடுமையா உழைச்சா... பொண்டாட்டியைக் கண்டுக்க மாட்டேங்கறான்னு மட்டம் தட்டுவாங்க.
 

பொண்டாட்டியை கவனிச்சுக்கிட்டா.. அவளையே சுத்தி சுத்தி வரான். வேலை வெட்டி இல்லாத பயன்னு கட்டம் கட்டுவாங்க..
 

அது போகட்டும்.. ஒரு பொண்ணைப் பார்த்து அழகா இருக்கேன்னு சொன்னா அது ஈவ் டீசிங்..ன்னு கெளப்பி விடுவாங்க.
கண்டுக்காம போனா அழகை ரசிக்கத் தெரியாத ஜடம்..!ன்னு அமுக்கி வைப்பாங்க.
 

எதுக்காச்சும் அழுதோம்ன்னா பொம்பள மாதிரி அழறான் பாரும்பாங்க..
திடமா இருந்தா நெஞ்சுல ஈவு இரக்கம் இல்லாத அரக்கன்னு வாருவாங்க..
 

பொண்டாட்டியை கேட்டு முடிவெடுத்தா தானா முடிவெடுக்கத் தெரியாத முட்டாள்..ன்னு பட்டம்.
சரின்னு நாமளே ஒரு முடிவு எடுத்தா தான் ஆம்பிளைங்கற அகங்காரம்..ன்னு திட்டும்.
 

ஏதாவது பிடிச்சது வாங்கிட்டுப் போய் கொடுத்தா "என்னத்துக்கு இப்போ காக்கா பிடிக்கிறீங்க..?" அப்படின்னு ஒரு நக்கல்.
 

ஒன்னும் வாங்கிட்டுப் போகலேன்னா "ஒரு முழம் பூவுக்கு விதியத்துப் போயிட்டேனே..!" ன்னு மூக்கை சிந்திக்கிட்டு விக்கல்..
 

ஒரு குறிக்கோளோடு உழைச்சா, " வேலையைக் கட்டிகிட்டு மாரடிக்க வேண்டியதுதானே..எதுக்கு உங்களுக்கு பொண்டாட்டி..?" ன்னு ஏசல்.
சரின்னு சினிமாவுக்கு அழைச்சுட்டுப் போனா, " அந்த ஹீரோ மாதிரி ஒரு லட்சியம் வேணுமுங்க மனுஷனுக்கு.. எப்படி உழைச்சு முன்னேறி கார் பங்களா வாங்கினான் பாத்தீங்களா..?"ன்னு பூசல்..
 

இந்த கருத்து ஒஹோ என்று இருக்கிறதுன்னு எழுதினா, ஆனாதிக்க உலகம் அப்படின்னு சொல்லுவாங்க.

"நல்ல கணவர்" எனும் பெயர் பெற...

நல்ல கணவனாக இருக்க முதலில்
செய்யவேண்டியது என்னவென்றால் வெட்கம்,
மானம்,மரியாதை, சூடு, சொரணை,
இப்படி வேண்டாததை எல்லாம் போட்டு விடவேண்டும்.
 

காலையில் மனைவிக்கு முன் எழுந்திருந்து நல்ல
டிகாக்ஷன் காப்பி போட்டு மனைவி எழுந்திருக்கும்
போது சூடாகக் கொடுக்கவும்.
 

காய்கறிகள் வாங்கி வருவதோடு நிறுத்திக்கொள்ளாமல்
அவைகளை சமையலுக்குத் தேவையானபடி அரிந்து,
கழுவிக் கொடுக்கவேண்டும்.
 

அவ்வப்போது உபயோகித்த
பாத்திரங்களை கிளீன்செய்து அதை வைக்கவேண்டிய
இடத்தில் வைக்கவும்.
 

சாப்பிடும்போது ஆஹா, பேஷ்
என்று சொல்லிக்கொண்டே சாப்பிடவும்.
 

துணி துவைக்கும்
வேலைக்காரி வரவில்லையென்று துணிகளை பாத்ரூமிலேயே விட்டு விடக்கூடாது.
உங்கள் துணிகளைத் துவைத்து காயப்போடவும். (உங்களில்
உங்கள் மனைவியும் அடக்கம் என்பதை மறக்காதீர்கள்)
 

மனைவிக்கு உடம்பு சரியில்லையென்றால்
ஆபீசுக்கு மருத்துவ
விடுப்பு போட்டுவிட்டு மனைவிக்குத்
தேவையானவை பணிவிடைகளைச்செய்யவும்.
 

மனைவி ஷாப்பிங்க் போகும்போது கூடவே போய் அவர்கள்
வாங்கும் பொருட்களை பத்திரமாக வீட்டிற்குக்
கொண்டுவந்து சேர்க்கவேண்டும்.
 

மாமியார் வீட்டு ஜனங்கள் வந்தால் ரயில்வே ஸ்டேஷன்
அல்லது பஸ் ஸ்டேண்டிற்குப் போய்
வரவேற்று டாக்சி வைத்து வீட்டிற்குக்
கூட்டிவரவேண்டும்.
ஆட்டோவில் எக்காரணம் கொண்டும்
கூட்டிவரக்கூடாது.
 

அந்த ஜனங்களை உள்ளூரில் பக்கத்து ஊர்களில் பார்க்க
வேண்டிய இடங்களுக்கு டாக்சியில்
கூட்டிக்கொண்டு போய் காண்பித்துக் கூட்டிவரவேண்டும்.
 

அவர்கள் சில மாதங்கள் கழித்து ஊருக்குப்
போகும்போது உண்மையாக வருத்தப்பட வேண்டும்.கண்களில்
கண்ணீர் வந்தால் நல்லது.
 

இந்த முறைகளெல்லாம் அக்மார்க் முத்திரை வாங்கியவை.
இவை கட்டாயம் உங்களுக்கு நல்ல கணவன் பட்டத்தை உங்கள்
மனைவியிடமிருந்து மட்டுமல்ல, உங்கள்
மாமியாரிடமிருந்தும் பெற்றுத்தரும். . .

ஒரு பெண்ணின் மனதை தொடு
.
உடம்பை தொட நினைக்காதே !!
.
இதயத்தை திருடு,
கற்பை திருட நினைக்காதே!!
.
சிரிக்க வை,
.
அவளிடம் கண்ணீரை வர
வைக்காதே!!
பெண்ணை குழந்தையாய் மதி
.
சொற்களால் வதைக்காதே !!
.
அவளுக்காக
சிறிது விட்டு கொடு
.
அவள் வாழ்நாள் முழுவதும்
உன்னை
.
குழந்தையாக பார்த்துக்
கொள்வாள் !!!

Tuesday, 5 August 2014

சில பெண்களின் காதலையும் மதிப்போம்....


 
 
 ஒரு பெண் விரும்புவது உங்களுடைய காரையோ, பர்ஸையோ, பரிசுப் பொருட்களையோ அல்ல.
 
அவளுக்கு தேவைப்படுவதெல்லாம்

* உங்களுடைய நேரம்
* உங்கள் புன்னகை
* உங்கள் நேர்மை
* உங்கள் புரிதல்
மற்றும் உங்களுடைய முதல் சாய்ஸாக அவள் இருக்க வேண்டும்என்பதைத்தான்.


பெண்ணிற்கும் உண்டு காதல் தோல்வி . . .
ஆனாலும் , இவள் ஆறுதல் தேடியதில்லை மதுவிலோ போதையிலோ . . . !
இவள் பரிதாபம் எதிர்பார்த்ததில்லை மாப்ள-
மச்சான் நண்பர்களிடத்தில் . . . !

இவள் சோகத்தை மறந்ததில்லை கானா மெட்டுக்கள்
பாடி . . . !

இவள் பழி சுமத்தியதில்லை ஒட்டு மொத்த
ஆண்கள் வர்க்கமே மோசமென்று !

இவள் கவனிக்கத் தவறியதில்லை கேட்கக்கூசும்
விமர்சனங்களை . . . !

இவளுக்கு தெரிந்தது, முடிந்தது, அனுமதிக்கப்பட்டது
எல்லாம் வெறும் “தலையணை நனைத்தலும் யாருக்கும் தெரியாமல்
தன்னை வருத்துவது'' மட்டுமே . . . ! ! !