சென்னை இராயப்பேட்டைக்கு ஒரு சின்ன வேலையாக சென்றேன். என் வேலையை முடித்துவிட்டு பஸ் ஏறுவதற்காக பஸ் நிலையத்தில் நின்றேன். அப்போது எதிரே furniture கண்காட்சி போட்ருந்தாங்க, சரி சும்மா தான் இருக்கோம் அப்படி என்ன தான் இருக்கு னு போவோம் னு போனேன். உள்ளே போக 30 Rupees டிக்கெட் entrance fee வச்சிருந்தாங்க . நான் டிக்கெட் வாங்க வரிசையில நின்னுகிட்டு இருந்தேன்.
.அப்ப Audi car ல ஒரு business man வந்தாரு . அங்க வந்துட்டு counter ல ஒரு Visiting Card காமிச்சாரு, நான் Builder னு சொன்னாரு. அதுக்கு அந்த Cashier, சார் எல்லோரும் டிக்கெட் வாங்கனும் . டிக்கெட் விலை 30 ரூபாய் தான். கொஞ்ச நேரம் Cashier கூட அந்த Builder வாக்கு வாதம் பண்ணிட்டு இருந்தாரு . நான் மனசில நினைச்சிகிட்டேன், 30 ரூபா கொடுத்து டிக்கெட் வாங்க வக்கு இல்ல இவனுக்கு Audi Car கேட்குதாம்.
இப்படிக்கு
க.இசக்கிசெல்வம்
குன்றத்தூர் முருகன் கோவிலுக்கு ஒரு திருமணத்திற்காக சென்றிருந்தேன். மலை படியில் ஏறி கொண்டிருக்கையில் மலை உச்சியில் இருந்து முதல் பத்து படியில் வயதானவர்கள் ஓட்டை வைத்து பணம் கேட்டு கொண்டிருந்தார்கள் . அந்த வழியாக மலை ஏறும் போது ஒரு முதியவர் சொன்னார், யாராவது ஐந்து ரூபாய் கொடுத்தால் நாம அஞ்சு பேரும் ஒரு ஒரு ரூபாய் பிரித்துக் கொள்வோம் என்று சொன்னார் . அப்ப தான் மனசில நினைச்சேன் ஒரு ரூபாய் எவ்வளவு பெரிய Amount என்று, நம்மிடம் ஒன்றுமே இல்லாத போதும் கொடுத்து உதவுகிற அந்த மனம் தான் கோடீஸ்வரன்.
நீங்களே முடிவு பண்ணுங்க யார் கோடீஸ்வரர்
க.இசக்கிசெல்வம்
No comments:
Post a Comment