Thursday, 7 March 2019

வாழ்க்கையில ஜெயிக்கணுமா உங்களுக்கு பிடிச்சத பண்ணுங்க


இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை, இலட்சியம் இருக்கும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஆசை இருக்காது, ஒரு சிலருக்கு பூ பிடிக்கலாம் மற்றவருக்கு அது பிடிக்காமல் இருக்கலாம். முதலில் ஒவ்வொருவரும் தனக்கு என்ன தனித்திறமை உள்ளது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதை கண்டுபிடித்தாலே அதை நோக்கி பயணம் செய்ய எளிதாக இருக்கும். நீங்கள் தனியாக இருக்கும் போது என்ன நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகப்போறீர்கள்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நீ இதைத்தான் படிக்க வேண்டும், இதை படிக்ககூடாது என்று சொல்வதை தவிர்க்க வேண்டும். தங்கள் குழந்தைகளுக்கு எதன்மேல் விருப்பம் உள்ளது என்பதை கண்டறிந்து அதன்மேல் அவனை focus பண்ண சொல்லி அவன் திறமையை கொண்டு வர வேண்டும். எந்த பெற்றோரும் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடக்கூடாது. பள்ளிக்கூடத்தில் தான் ஆசிரியர்கள் ஒரு சில மாணவருடன் ஒப்பிட்டு பேசுவார்கள். தாம் பெற்ற குழந்தையை மற்றவருடன் ஒப்பிட்டு பேசக்கூடாது என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் ஒருபோதும் பெற்றோரை மற்றொரு பெற்றோருடன் ஒப்பிட்டு பேசுவதில்லை. எந்த துறையில் ஆர்வம் உள்ளதோ அதில் முழு முயற்சியோடு களம் இறங்க வேண்டும். பிடிக்காத ஒரு துறையில் நுழைந்து அதில் தோல்வி கண்டால் அவனால் தாங்க முடியாது. அதுவே அவனுக்கு பிடித்த துறையில் சேர்ந்து தோல்வி கண்டால் என்ன நடந்தாலும் பார்க்கலாம் என்று திரும்ப திரும்ப அதில் காலடி வைப்பான். அதுதான் தன்மேல் தான் வைத்திருந்த நம்பிக்கை. பெற்றோர்கள் எப்போதும் குடும்பத்திற்கு ஆணிவேராக இருங்கள். தன் பையன் ஒரு குறிப்பிட்ட துறையில் வெற்றி பெற்றால் பெற்றோர்கள் தான் ஆணிவேர். நீங்கள் ஆணிவேராக இருக்க ஆசைப்படுங்கள் .

ஒரு வசதியான வீட்டு பையன் அவன் வாழ்வில் வெற்றி பெற்றால் தன் வெற்றிக்கு என் பெற்றோர்கள் உறுதுணையாக இருந்தார்கள், support ஆக இருந்தார்கள் என்று சொல்வார்கள் . கஷ்டம் என்ற வார்த்தை அந்த வசதியான வீட்டு பையன் வாயில் இருந்து வராது. அதுவே ஏழை வீட்டு பையன் வெற்றி பெற்றால் என்னுடைய வெற்றிக்கு காரணம் என் பெற்றோர்கள். என் பெற்றோர்கள் என்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்கள் , எங்க அப்பா கூலி வேலை பார்த்து படிக்க வைச்சாங்க , எங்க அம்மா வீட்டு வேலை செய்து படிக்க வைச்சாங்கனு பெருமையாக சொல்லுவான், அதை ஒருபோதும் தாழ்வாக  சொல்லமாட்டான். அந்த ஒரு நிமிடம் போதும் அதுக்காகத்தான் எல்லா பெற்றோரும் காத்திருக்கிறார்கள். என் பிள்ளை எப்போ வெற்றி பெற்று என்னை மேடை ஏற்றி மைக் என் கையில் இருக்கும் போது எனக்கு பேச்சு வராமல் இருக்கும் , அந்த ஒரு நிமிடத்திற்காக தான் வாழ்கிறேன்  என்று எல்லா பெற்றோரும் சொல்வார்கள். நீ என் வயிற்றில் பிறந்ததுக்கு நான் பாக்கியம் செய்திருக்கனும் னு கொஞ்சுவாள். வாழ்க்கையில் அதைவிட ஒரு அழகான காலத்தை ஒருபோதும் பார்க்க முடியாது. அந்த ஒரு கணம் போதும் , அந்த ஒரு கண மகிழ்ச்சி வேண்டுமென்றால் அவனை அவன் பாதையில் போக விடுங்கள். அவனது இலட்சியத்தை அடைய வையுங்கள். ஒருமுறை வெற்றி பெற்றால் திரும்ப கீழே வரமாட்டான் . எப்போதுமே மேலேயே தான் இருப்பான். அப்படியே கீழே வந்தாலும் அவன் ஏற முயற்சிப்பான் . Bcoz  அவன் நிறைய தோல்விகளை கண்டு முன்னுக்கு வந்தவன். தன்னை தளரவிட மாட்டான். வெற்றி பெற்றவர்கள் குழந்தை போல. சிறு குழந்தை நடக்க ஆரம்பிக்கும், அந்த குழந்தைக்கு கீழே விழுவோம் னு தெரியாது. தைரியமாக எழ ஆரம்பிக்கும். பிறகு கீழே விழும் திரும்ப திரும்ப எழ ஆரம்பிக்கும்போது அதன் முயற்சி புலப்படுகிறது. முயற்சி செய்ய செய்ய தான் ஒரு கட்டத்தில் அந்த குழந்தை நடக்க ஆரம்பிக்கிறது. அதுபோல தான் எல்லோரும் வெற்றி பெற்றவர்கள்.

Ennoda small advice to all,,  உங்களுக்கு பிடிச்ச  துறையை தேர்ந்தெடுங்க, மன நிம்மதியோட வாழலாம். ஒரு திருப்தி இருக்கும்.  அது எதுவானாலும் இருக்கலாம் Like Business, Sports, Photography, Dance, Teaching, Research, Acting etc... 

உங்களுக்கு பிடிச்சத  பண்ணனும் னா கொஞ்சம் கஷ்டப்படனும் , இந்த உலகத்துல அவ்வளவு சீக்கிரம் முன்னேற விட மாட்டாங்க.

இப்படிக்கு
இசக்கி செல்வம்.க

No comments:

Post a Comment