Life ல ஒரு பொண்ண லவ் பண்ணணும். அந்த பொண்ண லவ் பண்ணும் போது வேற எந்த பொண்ண பார்த்தாலும் அழகா தெரிய கூடாது. அந்த மாதிரி ஒரு பொண்ண பார்த்து உணர்வு பூர்வமாக காதலிக்கனும். Life ல ஒரு பொண்ணு மேல உங்களோட மொத்த பாசத்தையும் காட்டுங்க அந்த பொண்ணு உங்கள விட்டு எங்கேயும் போக மாட்டாள். உங்கள மட்டுமே சுத்திட்டு வருவாள். அந்த மாதிரி ஒரு பொண்ண பார்த்து லவ் பண்ணி மொத்த பாசத்தையும் காமிக்கனும். உங்களுக்கு அந்த பொண்ணு அடிமை. நீங்க அந்த பொண்ணுக்கு அடிமை. இவ்வளவு தாங்க காதல்.
Thursday, 7 March 2019
சாதி இருக்கா இல்லையா?
தமிழ்நாட்டில் சாதி ஒழிப்பு ஒழிப்பு னு பேசிட்டு இருக்காங்க. ஆனா 98% சாதி ஒழியவில்லை. ஒவ்வொரு பெற்றோரும் எதிர்பார்ப்பது தன் குழந்தைக்கு தன்னுடைய சாதியில் வரன் பார்த்து திருமணம் முடிக்க வேண்டும் என்பது தான். முதல் காரணம் நம் உறவினர்கள் , ஊர்க்காரங்க தான். ஒரு பையன் /பொண்ணு லவ் பண்ணிட்டு அவங்க வீட்ல முதல் தடவ சொன்னா அவங்க பெத்தவங்க கேட்கிற முதல் கேள்வி அந்த பையன்/பொண்ணு நம்ம சாதியா இல்ல அடுத்த சாதியா ? ஒரே சாதியாக இருந்தால் அடுத்த கேள்வி வசதியான வீடா இல்ல கம்மியான வசதியா? வேற சாதியாக இருந்தால் அந்த முடிவு பெற்றோர்கள் கையில். ஒருசில பெற்றோர்கள் நம்ம சாதியை விட உயர்ந்த சாதி னா ஒத்துக்கிடுவாங்க. நம்மல விட தாழ்ந்த சாதியா இருந்தா கண்டிப்பா ஒத்துக்கிட மாட்டாங்க. முதல்ல சாதிய பார்த்து கல்யாணத்த நிறுத்துனாங்க. இப்பலாம் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதின்னு இவங்களே பிரிச்சிகிட்டாங்க. இப்ப உள்ள காலத்துல இருக்கிற பெரிய காதல் எதிர்ப்பு வேற வேற சாதி இல்ல,உயர்ந்த சாதி , தாழ்ந்த சாதி தான். தன்னை விட உயர்ந்த சாதி பெண்ணா இருந்தா திருமணத்துக்கு சம்மதிப்பாங்களாம் , ஆனால் அந்த உயர்ந்த சாதிக்கு இவங்க தாழ்ந்த சாதி தான. நம்ம ஒருத்தன தாழந்த சாதின்னு சொன்னா நம்மலே ஒருத்தனுக்கு தாழ்ந்த சாதி தான். சாதி வாரியாக பிரிச்சத கூட ஒரு வழியாக ஒத்துக்கிடலாம்,ஆனால் உயர்ந்த சாதி , தாழ்ந்த சாதின்னு சொன்னா ஒத்துக்கிட முடியாது.
கிராமத்துல சாதி மாற்றி கல்யாணம் பண்ணா என்ன ஆகும் னு சொல்றேன். கிராமத்துல சாதி மாற்றி Arrange Marriage நடந்தது கிடையாது. அப்படியே ஒரு பையனும் பொண்ணும் லவ் பண்ணாலும் ஓடி போயிருவாங்க. ஆனால் அந்த பெற்றோர்கள் அந்த ஊர்ல பல தலைமுறையாக வாழ்ந்து இருப்பார்கள். நம்ம பொண்ணு இப்படி பண்ணிட்டான்னு அவங்க அந்த ஊர்ல இருக்க மாட்டாங்க. அது அவங்களுக்கு பெரிய அவமானம். அந்த ஊர் அவங்கள தப்பா பேசும், இந்த விஷயத்துல பெத்தவங்களுக்கு கௌரவம் தான் முக்கியம்.
அதுவே ஒரு பையன் வேற சாதி பொண்ண லவ் பண்ணி ஓடி போயிட்டா அந்த குடும்பம் அந்த ஊர்ல தான் இருக்கும்.
ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் னா ஆண் பண்ணா தப்பில்ல / பெண் பண்ணா தப்பு . இதுதான் இந்த சமூகம்.
பெண்களுக்கு ஒரு அட்வைஸ். வேற சாதி பையன லவ் பண்ணா கண்டிப்பா பெத்தவங்களுக்கு பிடிக்காது. Bcoz உங்க கல்யாணத்த பற்றி பிற உறவினர்களிடம் பேசும் போது அவங்க கேட்கிற முதல் விஷயம் பையன் நம்ம சாதியா? முதலில் வருவது சாதிதான் .
நீங்க லவ் பண்ற பையன்/பொண்ணு வேற சாதியாக இருந்தாலும் உங்கள் வீட்டில் புரிய வையுங்கள். அந்த பையன்/பெண்ணிடம் உங்கள் காதலை எப்படி பொறுமையாக இருந்து மனதில் நினைத்து வாழ்ந்தீர்களோ அதுபோல் உங்கள் வீட்டிலும் சம்மதம் வாங்குவதற்கு பொறுமையாக இருந்து உங்கள் காதலை பெற்றோர்களுக்கு புரிய வைக்க வேண்டும். யாருன்னு தெரியாத ஒரு பையன்/பொண்ணு கிட்ட உன்ன பிடிச்சிருக்கின்னு சொன்ன தைரியம் உங்க கூட எப்பவுமே இருந்த பெற்றோரிடம் ஏன் சொல்ல மறுக்கிறீங்க. அவங்க கிட்ட இருந்து சம்மதம் வாங்குறது கஷ்டம் தான். பொறுமையாக இருந்து சம்மதம் வாங்க வேண்டும். குடும்பத்துல சுந்தர பாண்டியன் படத்துல வர மாதிரி சித்தி, அத்தை னு வந்து உங்க மனச மாத்த வருவாங்க.
நான் அந்த பையன்/பொண்ண தான் கல்யாணம் பண்ணுவேன்னு உங்க வீட்ல புரிய வையுங்க. பெத்தவங்களுக்காக, பிடிக்காத வேற ஒருத்தர கல்யாணம் பண்ணிட்டு வாழ்றத விட பிடிச்ச ஒருத்தருக்காக wait பண்ணி பார்க்கலாமே? இந்த உலகத்துல பேச்சு வார்த்தை மூலமாக தீர்க்க முடியாதது எதுவுமே இல்லை. வாழ்வது ஒருமுறை அந்த வாழ்க்கை மிக பயனுள்ளதாக இருக்க வேண்டும். நமக்கு பிடித்தவர் கூட வாழ்ந்தால் மட்டுமே இந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உண்டு என்று நினைக்கும் அளவிற்கு ஒருவன்/ஒருத்தி இருப்பான். அந்த ஒருவன்/ஒருத்தி கூட உங்கள் வாழ்க்கையை தொலைத்து விடுங்கள்.
( For Arrange Marriage )
சாதி இல்ல இல்லன்னு சொல்றவங்களுக்கு ஒரு கேள்வி? நீங்க ஒரு வேலை விஷயமா வெளியூருக்கு போறீங்க. அங்க போற வழியில ஒரு பொண்ண பார்க்கிறீங்க , அந்த பொண்ணு பார்ப்பதற்கு அழகாக இருக்கிறாள். இந்த பொண்ண நம்ம பையனுக்கு கல்யாணம் பண்ணா நல்லா இருக்கும் னு நினைக்கிறீங்க. அந்த பொண்ணோட முகவரியை கண்டுபிடித்து ஒரு வழியாக அவங்க வீட்டை கண்டுபிடிச்சிட்டீங்க. உங்க காதுக்கு ஒரு செய்தி வருது, அந்த பொண்ணு நம்ம சாதி இல்ல வேற சாதி னு சொல்றாங்க. இப்ப உங்க பையனுக்காக வேற சாதி வீட்டுப்படி ஏறி பொண்ணு கேட்க தைரியம் இருக்கா? அப்படியே தைரியம் இருந்தாலும் ஊரைக் கூட்டி சொந்தம் பந்தம் எல்லோரையும் அழைச்சிட்டு கல்யாணத்த முடிக்க தைரியம் இருக்கா?
Bharath Matrimony ல 98% பேர் போட்ருக்காங்க. We belong to the XXXXX Caste and looking for a match from the same community.
இப்படிக்கு
இசக்கி செல்வம் க
ReplyForward
|
வாழ்க்கையில ஜெயிக்கணுமா உங்களுக்கு பிடிச்சத பண்ணுங்க
இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை, இலட்சியம் இருக்கும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான ஆசை இருக்காது, ஒரு சிலருக்கு பூ பிடிக்கலாம் மற்றவருக்கு அது பிடிக்காமல் இருக்கலாம். முதலில் ஒவ்வொருவரும் தனக்கு என்ன தனித்திறமை உள்ளது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அதை கண்டுபிடித்தாலே அதை நோக்கி பயணம் செய்ய எளிதாக இருக்கும். நீங்கள் தனியாக இருக்கும் போது என்ன நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகப்போறீர்கள்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நீ இதைத்தான் படிக்க வேண்டும், இதை படிக்ககூடாது என்று சொல்வதை தவிர்க்க வேண்டும். தங்கள் குழந்தைகளுக்கு எதன்மேல் விருப்பம் உள்ளது என்பதை கண்டறிந்து அதன்மேல் அவனை focus பண்ண சொல்லி அவன் திறமையை கொண்டு வர வேண்டும். எந்த பெற்றோரும் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடக்கூடாது. பள்ளிக்கூடத்தில் தான் ஆசிரியர்கள் ஒரு சில மாணவருடன் ஒப்பிட்டு பேசுவார்கள். தாம் பெற்ற குழந்தையை மற்றவருடன் ஒப்பிட்டு பேசக்கூடாது என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் ஒருபோதும் பெற்றோரை மற்றொரு பெற்றோருடன் ஒப்பிட்டு பேசுவதில்லை. எந்த துறையில் ஆர்வம் உள்ளதோ அதில் முழு முயற்சியோடு களம் இறங்க வேண்டும். பிடிக்காத ஒரு துறையில் நுழைந்து அதில் தோல்வி கண்டால் அவனால் தாங்க முடியாது. அதுவே அவனுக்கு பிடித்த துறையில் சேர்ந்து தோல்வி கண்டால் என்ன நடந்தாலும் பார்க்கலாம் என்று திரும்ப திரும்ப அதில் காலடி வைப்பான். அதுதான் தன்மேல் தான் வைத்திருந்த நம்பிக்கை. பெற்றோர்கள் எப்போதும் குடும்பத்திற்கு ஆணிவேராக இருங்கள். தன் பையன் ஒரு குறிப்பிட்ட துறையில் வெற்றி பெற்றால் பெற்றோர்கள் தான் ஆணிவேர். நீங்கள் ஆணிவேராக இருக்க ஆசைப்படுங்கள் .
ஒரு வசதியான வீட்டு பையன் அவன் வாழ்வில் வெற்றி பெற்றால் தன் வெற்றிக்கு என் பெற்றோர்கள் உறுதுணையாக இருந்தார்கள், support ஆக இருந்தார்கள் என்று சொல்வார்கள் . கஷ்டம் என்ற வார்த்தை அந்த வசதியான வீட்டு பையன் வாயில் இருந்து வராது. அதுவே ஏழை வீட்டு பையன் வெற்றி பெற்றால் என்னுடைய வெற்றிக்கு காரணம் என் பெற்றோர்கள். என் பெற்றோர்கள் என்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்கள் , எங்க அப்பா கூலி வேலை பார்த்து படிக்க வைச்சாங்க , எங்க அம்மா வீட்டு வேலை செய்து படிக்க வைச்சாங்கனு பெருமையாக சொல்லுவான், அதை ஒருபோதும் தாழ்வாக சொல்லமாட்டான். அந்த ஒரு நிமிடம் போதும் அதுக்காகத்தான் எல்லா பெற்றோரும் காத்திருக்கிறார்கள். என் பிள்ளை எப்போ வெற்றி பெற்று என்னை மேடை ஏற்றி மைக் என் கையில் இருக்கும் போது எனக்கு பேச்சு வராமல் இருக்கும் , அந்த ஒரு நிமிடத்திற்காக தான் வாழ்கிறேன் என்று எல்லா பெற்றோரும் சொல்வார்கள். நீ என் வயிற்றில் பிறந்ததுக்கு நான் பாக்கியம் செய்திருக்கனும் னு கொஞ்சுவாள். வாழ்க்கையில் அதைவிட ஒரு அழகான காலத்தை ஒருபோதும் பார்க்க முடியாது. அந்த ஒரு கணம் போதும் , அந்த ஒரு கண மகிழ்ச்சி வேண்டுமென்றால் அவனை அவன் பாதையில் போக விடுங்கள். அவனது இலட்சியத்தை அடைய வையுங்கள். ஒருமுறை வெற்றி பெற்றால் திரும்ப கீழே வரமாட்டான் . எப்போதுமே மேலேயே தான் இருப்பான். அப்படியே கீழே வந்தாலும் அவன் ஏற முயற்சிப்பான் . Bcoz அவன் நிறைய தோல்விகளை கண்டு முன்னுக்கு வந்தவன். தன்னை தளரவிட மாட்டான். வெற்றி பெற்றவர்கள் குழந்தை போல. சிறு குழந்தை நடக்க ஆரம்பிக்கும், அந்த குழந்தைக்கு கீழே விழுவோம் னு தெரியாது. தைரியமாக எழ ஆரம்பிக்கும். பிறகு கீழே விழும் திரும்ப திரும்ப எழ ஆரம்பிக்கும்போது அதன் முயற்சி புலப்படுகிறது. முயற்சி செய்ய செய்ய தான் ஒரு கட்டத்தில் அந்த குழந்தை நடக்க ஆரம்பிக்கிறது. அதுபோல தான் எல்லோரும் வெற்றி பெற்றவர்கள்.
Ennoda small advice to all,, உங்களுக்கு பிடிச்ச துறையை தேர்ந்தெடுங்க, மன நிம்மதியோட வாழலாம். ஒரு திருப்தி இருக்கும். அது எதுவானாலும் இருக்கலாம் Like Business, Sports, Photography, Dance, Teaching, Research, Acting etc...
உங்களுக்கு பிடிச்சத பண்ணனும் னா கொஞ்சம் கஷ்டப்படனும் , இந்த உலகத்துல அவ்வளவு சீக்கிரம் முன்னேற விட மாட்டாங்க.
இப்படிக்கு
இசக்கி செல்வம்.க
Subscribe to:
Posts (Atom)