Saturday, 27 September 2014

வேலையில்லா பட்டதாரி


 
 
ஓர் இளைஞன் B.E பட்டதாரி.
எங்கெங்கோ வேலை தேடினான்.
அவன் ஏறி இறங்காத நிறுவனங்களே இல்லை.
எங்கும் வேலை கிடைக்க வில்லை. ஒரு நாள்
அந்த ஊருக்கு ஒரு சர்கஸ்கம்பெனி வந்தது....
அதிலாவது ஏதேனும்
வேலை கிடைக்குமா என்று அந்த
சர்க்கஸ் கம்பெனி முதலாளியைப் பார்த்துக்
கேட்டான்.
அவனும் வேலை காலி இல்லை என்றான்.
பிறகு இவன்
எப்படியாவது ஒரு வேலை கொடுங்கள்
என்று கெஞ்சினான். அந்த முதலாளி சொன்னான்.
தம்பி கம்பெனியில் இருந்த
குரங்கு ஒன்று நேற்று இறந்துவிட்டது.
அந்த வேலையை நீ செய்வதாக இருந்தால்
உன்னை சேர்த்துக் கொள்கிறேன் என்றார்.
சரி என்று அவனும் ஒப்புக்கொடு வேலைக்குச்
சேர்ந்தான். குரங்கு செய்யும்
வித்தைகளை எல்லாம்
கற்றுக்கொண்டு குரங்கு வேசம்
போட்டு இவனும் செய்தான். ஒரு நாள் சர்கஸ்
நடந்து கொண்டிருந்தது.
பெருந்திரளாக கூட்டம் கூடியிருந்தது.
அரங்கில் உயரத்தில் தொங்கிய ஊஞ்சலில்
இருந்து குரங்கு வித்தைகளை செய்யும்போது கைநழுவி கீழே விழுந்து விட்டான்.
அடி அவ்வளவாகப்படவில்லை. ஆனால்
இவன் கீழே விழுவதற்கும்
அங்கே கூண்டிலிருந்த
சிங்கத்தைத் திறந்து விடுவதற்கும் சரியாக
திறந்து விடுவதற்கும் சரியாக இருந்தது.
நடுங்கிப் போனான். வயிற்றுப்
பசியை போக்கவே வேலை தேடி இங்கு வந்தோம்.
இன்று சிங்கத்தின் வயிற்றுக்கு இரையாகப்
போகிறோம் என்று அஞ்சி நடுங்கினான்.
பேச நாகூட வரவில்லை. இவன்
அஞ்சி நடுங்குவதை சிங்கம் பார்த்து.
அவனை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தது.
சரி நம் கதை முடிந்தது என்று நினைத்தான்.
குரங்கு வேடத்தில் இருந்த B.E பட்டதாரி.
சிங்கம் மெல்ல வாயைத்
திறந்து பேசியது. “! B.E! பயப்படாதே நான்
M.E, ”
என்றது. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம்
எப்படி இருக்கிறது என்பதை இக்கதை விளக்குகிறது...

 

No comments:

Post a Comment